4 ஆண்டுகளுக்கு முன்பு மும்தாஜ் வாழ்க்கையை புரட்டிப் போட்ட சம்பவம்: என்ன நடந்தது?
Recommended Video

சென்னை:நடிகை மும்தாஜ் இரண்டு காரணங்களுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளாராம்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் நடிகை மும்தாஜ் கலந்து கொண்டுள்ளார். பிக் பாஸ் வீட்டிற்கு வருமாறு கேட்டதும் முதலில் யோசித்த மும்தாஜ் பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து அவர் கூறியிருப்பதாவது,

புகழ்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் வந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய அங்கீகாரம். புகழ், ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கலாம். நான் வெற்றி, தோல்வியை பார்த்திருக்கிறேன். என்னை விமர்சித்துள்ளார்கள், புகழ்ந்துள்ளார்கள். நான் எல்லாத்தையும் கடந்து வந்துவிட்டேன்.

மகிழ்ச்சி
இங்கு எனக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று தெரியாது. என்ன கிடைத்தாலும் மகிழ்ச்சி. நீங்க எனக்கு என்ன கொடுக்கிறீர்களோ அதையே அதிகமாக திருப்பிக் கொடுப்பேன். கொஞ்சம் அன்பு காட்டினால் 10 மடங்கு அன்பு செலுத்துவேன்.

வேண்டாம்
எனக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தை எழுப்பி விடாதீர்கள். அது யாருக்கும் நல்லது இல்லை. போட்டியாளர்கள் அனைவருக்குள்ளும் மிருகம் உள்ளது. அதை எழுப்பாமல் இருப்பதே நலல்து.

கமல்
பிக் பாஸ் வீட்டிற்கு வர இரண்டு காரணம். ஒன்று கமல் சாரை வார, வாரம் பார்க்கலாம். இரண்டு வாழ்க்கை ஒரே மாதிரியாக சென்று கொண்டிருந்தது. அதனால் ஏதாவது புதிதாக செய்ய நினைத்த நேரத்தில் இந்த வாய்ப்பு வந்தது என்றார் மும்தாஜ்.

நமீதா
மும்தாஜின் பேச்சு, நடவடிக்கைகள் எல்லாம் பார்வையாளர்களுக்கு நமீதாவை நினைவூட்டுகின்றன. மும்தாஜ் அடுத்த நமீதாவா இல்லை வேறு யாராவதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

என்ன நடந்தது
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் தனது வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டதாக மும்தாஜ் தெரிவித்துள்ளார். அது என்ன கண்ணு சம்பவம் என்று ரசிகர்கள் அக்கறையுடன் கேட்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











