மூக்குமுட்ட குடித்துவிட்டு பார்ட்டியில் ரகளை செய்த 'நாகினி' மவுனி ராய்
மும்பை: நாகினி 2 டிவி தொடரில் மவுனி ராய் பார்ட்டியில் குடித்துவிட்டு ரகளை செய்கிறாராம்.
நாகினி இந்தி தொடர் டப் செய்யப்பட்டு தமிழில் வெளியாகி பெரும் ஹிட்டாகியுள்ளது. நாகினியாக நடித்த மவுனி ராய்க்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் நாகினி தொடரின் 2வது சீசன் எடுக்கிறார்கள்.

மவுனி ராய்
2வது சீசனில் ஷிவாங்கியாக நடிக்கும் மவுனி ராய் ராக்கியாக நடிக்கும் கரண்விர் போராவை இம்பிரஸ் செய்ய ஒரு முயற்சி செய்ய அது உல்ட்டாவாகி ஊத்திக் கொள்கிறதாம்.

டான்ஸ்
ராக்கியை இம்பிரஸ் செய்ய மவுனி ராய் டான்ஸ் ஆடுகிறாராம். மவுனி கவர்ச்சியாக ஆடியும் ராக்கிக்கு பிடிக்காமல் போய்விடுகிறதாம். கருப்பு நிற சேலை உடுத்தி மவுனி ராய் கவர்ச்சியாக ஆடியும் ராக்கியை இம்பிரஸ் செய்ய முடியவில்லையாம்.

கருப்பு சேலை
மவுனி ராய் பார்ட்டியில் குடித்துவிட்டு ரகளை செய்கிறாராம். மவுனி ராய் குடித்திருப்பதை பார்த்து ராக்கிக்கு கோபம் தான் வருகிறதாம்.
நாகினி
மவுனி ராய் தான் நாகினி என்பது ராக்கிக்கு மெல்ல மெல்ல தெரிய வருகிறதாம். நாகமணி குறித்தும் ராக்கிக்கு தெரிய வருகிறதாம். மேலும் அவர் மவுனியிடம் இருந்து ஒதுங்க ஆரம்பிக்கிறாராம். இது மவுனியை கவலை அடையச் செய்கிறதாம்.


Click it and Unblock the Notifications











