Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
Naam iruvar namakku iruvar serial: ரெண்டு பேருக்கும் ரெண்டு கல்யாணம் நடந்தும் இப்படியா?
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன், அரவிந்த் ரெண்டு பேரும் இரட்டை பிள்ளைகள். இருவருக்குமே கல்யாணம் ஒரே நாளில் நடந்தது. இதுவரை இருவருக்கும் முதலிரவு நடக்கவில்லை.
அரவிந்த் குஸ்தி வாத்தியாரின் நண்பர் வீட்டில் பச்சிளம் குழந்தையில் இருந்தே வளர்கிறான். இப்போது டாக்டராகி இருக்கான்.இன்னொரு பிள்ளையான மாயன் மட்டும் பெத்த அப்பா அம்மாவான குஸ்தி வாத்தியார்,செல்வியிடம் வளர்கிறான்.
அரவிந்துக்கு கல்யாணம் செய்து வைக்க இருந்த படித்த பெண்ணான தேவியை கடத்தி வந்து மாயன் கல்யாணம் செய்துக்கறான். மாயனுக்கு கல்யாணம் செய்ய இருந்த சுமாராக படித்த தாமரையை டாக்டர் அரவிந்துக்கு கட்டாய கல்யாணம் செய்து வைக்கறாங்க.
விவகாரத்துக்கு விண்ணப்பம்
தேவி-மாயன், தாமரை-அரவிந்த் என்று இரு தம்பதியரும் கோர்ட்டில் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.மாயனுக்கு தேவியைப் பிடிக்கும், தேவிக்கு மாயனை பிடிக்காது. தாமரைக்கு அரவிந்தை பிடிக்கும், அரவிந்துக்கு தாமரையை பிடிக்காது.இதனால்தான் கோர்ட்டில் கேஸ் நடந்துகொண்டு இருக்கிறது. காலப் போக்கில் அரவிந்துக்கும் தாமரையை பிடித்துப் போகிறது.இதே போல தேவிக்கும் மாயனை பிடித்தும், குடும்பத்தார் கட்டாயத்தால் பிடிக்காமலும் என்று இருக்கிறது.
இருவருக்கும் முதல் ஆண்டு
இரு தம்பதிக்கும் முதல் திருமண ஆண்டு வருகிறது. இருவருக்குள்ளும் நெருக்கம் இல்லை என்று உணர்ந்த குஸ்தி வாத்தியார்,பிள்ளைகளின் திருமண நாளை,திருமணம் போலவே கொண்டாட நினைக்கிறார். இருவரின் விவாகரத்து கேஸின் தீர்ப்பும் மூன்று நாட்களில் வரவுள்ளது. இருந்தாலும் குஸ்தி வாத்தியாரான தனது மாமனாரின் மீது வைத்திருக்கும் மரியாதையில், தேவி திருமண நாள் கொண்டாட்டத்துக்கு சம்மதிக்கிறாள்.ஆனால் ,அரவிந்தும், தாமரையும் ராசியாகி கேஸை வாபஸ் வாங்கிய நிலையில், இருவரும் சேர்ந்து வாழலாம் என்று முடிவு எடுக்கிறார்கள்.
அம்மா அரவிந்த்
அரவிந்தை எடுத்து வளர்த்த அம்மாவுக்கு, தாமரையை பிடிக்கவில்லை.இருந்தாலும் இந்த திருமண நாள் கொண்டாட்டத்துக்கு பிள்ளைக்காக சம்மதிக்கறாங்க. திருமண நாள் என்னடான்னா உண்மையான திருமணம் போலவே. ஐயர் வைத்து சடங்குகள் செய்து, மாலை மாற்றி கல்யாணம் போலவே நடக்குது. தேவிக்கு இதில் உடன்பாடு இல்லை என்பது போல இருந்தாலும், மனத்துக்குள் குழப்பம்.
அம்மா மாத்திரை
ஒரு வழியாக முதலிரவு ஏற்பாடுகளும் செய்துவிட்டு, அவரவர் படுக்கச் சென்று விடுகிறார்கள். மாயனும், தேவியும் முதலிரவு இல்லை என்கிற முடிவில், மாயன் பால் பழம் மட்டும் சாப்பிட, இருவரும் எப்போதும் போல வாக்கு வாதம் செய்துட்டு, தூங்கிடறாங்க. தாமரையும், அரவிந்தும் செம மூடில் இருக்க, இவர்கள் இருவருக்குமாவது ஒரு வருடம் கழித்து முதலிரவு நடக்கும் என்று பார்த்தால்,, அரவிந்தின் வளர்த்த அம்மா தூக்க மாத்திரை குடிச்சுட்டு தற்கொலைக்கு முயற்சிக்கறாங்க.அரவிந்த் அவங்களை காப்பாற்றி கேட்டால், தாமரையை என்னால் மருமகளா ஏத்துக்க முடியலைன்னு அரவிந்த்கிட்ட மட்டும் தனியா சொல்றாங்க.
அரவிந்த் தாமரைக்கும் முதலிரவு நடக்கவில்லை!