Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
Kizhakku vasal serial: நாகப்பன் கவலையா யாருப்பா தீர்த்து வைப்பா?
சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் சமரசம் பேச போயிட்டு வந்த நாகப்பன் ரொம்ப கவலையில் இருக்கார்.
மனைவி பால் கொண்டு வர, அவள் என்னவோ வெள்ளைப் புடவையில் நிற்பது போல இவர் கண்களுக்கு தெரியுது. முகம் இருண்டது போல ஆகிவிடுகிறது.
என்னங்க என்னாச்சுங்க... உங்க முகம் ஏன் இப்படி இருக்குன்னு பொண்டாட்டி கேட்க, யாழினியைப் பத்தினை கவலை வந்திருச்சு ஜானகின்னு சொல்றார் நாகப்பன்.
Tamil selvi serial: கொம்பன் ஜெயிலில் இருந்து தப்பிச்சுட்டானாமே... இருக்கட்டுமே!
மகளுக்கு கல்யாணம்
நேத்து தேவராஜ் என்னை தனியா சமரசம் பேச அழைச்சுட்டு, அவன் ஆட்களை ரகசியமா ஆயுதங்களோட வரவழைச்சு ஒளிச்சு வச்சு என்னை ஏமாத்திட்டான். அவனால, என் உயிருக்கு ஆபத்து வந்துருமோன்னு நினைக்கறேன்.உயிர் போகுதேன்னு கவலை இல்லை. எனக்குப்பிறகு யாழினிக்கு கல்யாணம் செய்து வைக்க யார் இருக்காங்க. அவளுக்கு கல்யாணம் செய்து பார்த்துட்டா எனக்கு நிம்மதியாகிரும்.அப்புறம் அவ உன்னையும், தங்கச்சி அகல்யாவையும் பார்த்துக்குவான்னு சொல்றார்.
இப்படி பேசாதீங்கப்பா
அப்பா இப்படி எல்லாம் பேசாதீங்கப்பா... நீங்க எனக்கு கல்யாணம் பண்ணி, என் பிள்ளைங்களை பார்த்து, அகல்யா கல்யாணத்தையும் செய்து வச்சு அவ பசங்களையும் பார்ப்பீங்கப்பா... உங்களுக்கு ஒண்ணும் ஆகாது .. எப்பவும் நல்லா இருப்பீங்கப்பா. இனிமே இப்படி எல்லாம் பேசாதீங்கப்பான்னு அழறா.
இருட்டில் இருந்தால்
என்னால தேவராஜை பதிலுக்கு எல்லாம் செய்ய முடியும். ஆனா அவன் முதுகுல குத்துறவனா இருக்கான்மா. கண்ணை முழிச்சுகிட்டு இருக்கும்போது வெளிச்சத்துல என்னால எதையும் பண்ண முடியும். கண்ணை மூடிக்கிட்டு இருக்கும்போது ஏதாவது செய்ய வந்தா என்னம்மா பண்ண முடியும்னு சொல்றார் நாகப்பன்.
நாகப்பனை கொல்ல
இங்கு தேவராஜின் ஆட்கள், நாகப்பனைக் கொல்வது குறித்து ஆலோசனை பண்ணிக்கிட்டு இருக்க, தான் சொல்லாமலே தன்னுடைய ஆட்கள் தன்னை தொடர்ந்து வந்து, இப்படி நாகப்பன் தன் மீது நம்பிக்கை வைக்காமல் போனத்துக்கு காரணம் ஆயிட்டாங்களேன்னு வருத்தத்தில் இருக்கார்.