Don't Miss!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கன்னி ராசி நேயர்களே.. உங்க நல்ல நேரத்தை பாலிமர் டிவியில் பார்த்து தெரிஞ்சுக்கோங்க!
ஊடகங்களில் ஜோதிட நிகழ்ச்சிகளுக்கு தனி வரவேற்பு உண்டு. ராசிபலன், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, தினசரி, வார ராசிகளை சொல்வதைக் கேட்க ஆர்வமாக இருப்பார்கள்.
காலை நேரத்தில் பெரும்பாலான தமிழ் சேனல்களில்களில் ராசிபலன்தான் ஒளிபரப்பாகிறது. அந்த வரிசையில் பாலிமர் தொலைக்காட்சியில் நல்ல நேரம் என்ற நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகிறது.
இந்த நல்லநேரம் நிகழ்ச்சியில் ராசிபலன் சொல்வது மட்டுமல்லாது சற்றே வித்தியாசமானது என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.
நேயர்கள் நேரடி கேள்வி
பிற தொலைக்காட்சிகளில் இல்லாதது போல், நேயர்கள் நேரடியாக ஜோதிடர்களிடம் தொலைபேசி மூலம் தங்களது ராசிகளுக்கு உண்டான பலன்களை அறிந்து கொள்கின்றனர்.
பரிகாரங்கள் உண்டு
கஷ்டங்கள் தீர்வதற்கான பரிகாரங்களையும் ஜோதிடர்கள் விளக்கி கூறுவது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாம். மேலும் எந்தெந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது குறித்தும் பிரபல ஜோதிடர்கள் கூறுகின்றனராம்.
பிரபல ஜோதிடர்கள்
ஜோதிடர்கள் காழியூர் நாராயணன், எதார்த்த ஜோதிடர் ஷெல்வி, பூஷண்ஜி பழநியப்பன் உள்ளிட்டோர் விவரமாக கூறுவதால் நேயர்களுக்கு இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர்.
நேயர்களுக்கு பதில்
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்ரீவிஹானிகா கேட்கும் ராசிபலன் தொடர்பான கேள்விகளுக்கு ஜோதிடர்கள் பதிலளிப்பது நேயர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை நீக்கும் என்கின்றனர்.