Don't Miss!
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
‘மானாட மயிலாட’ மனதிற்கு உற்சாகம் தருகிறது – நமீதா
தமிழ் சினிமாவில் தன் கவர்ச்சியான நடிப்பால் கலக்கி அதனால் எக்கச்சக்க ரசிகர்களை தக்கவைத்திருக்கும் நமீதா மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக வந்து பல்வேறு இளம் நடனக் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் பேசும் கொஞ்சும் தமிழை கேட்பதற்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தனது சின்னத்திரை பயணம் குறித்து அவர் சொல்வதை படியுங்களேன்.
'மானாட மயிலாட' ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி மூலமாக பாராட்டுகிற வேலையை நான் செய்து வருகிறேன்.இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால்,நடனத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள், ரசிக்க தெரிந்தவர்கள் அதைப் பார்த்து பாராட்டும் போது, போட்டியாளர்களுக்கும், அந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கும் இன்னும் கூடுதல் உற்சாகம் கிடைக்கிறது.
சினிமாவை தவிர இன்று எனக்கு கிடைத்திருக்கும் ரசிகர் பட்டாளத்தில் பெரும்பாலானவர்கள் சின்னத்திரை மூலம் கிடைத்தவர்கள்தான்.அடித்தட்டு மக்கள் வரை போய்ச் சேருகிற சாதனமாக இன்று சின்னத்திரை இருக்கிறது. ரசிகர்களின் இடத்திற்கே சென்று, அவர்களைச் சந்திப்பது என்பது சின்னத்திரை மூலம்தான் முடியும்.
வட இந்திய நடிகர்கள்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு போட்டியாளர்களையும்,ரசிகர்களையும் உற்சாகப்படுத்துவார்கள்.
தென்னிந்தியாவில் இந்த வேலையை முதலில் நான் இறங்கி செய்ததால் எனக்கு நடிப்பதில் கிடைக்கிற திருப்தியை விடவும் அதிகமாக "மானாட மயிலாட' மூலம் கிடைக்கிறது. தற்போது என்னைத் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளில் குஷ்பு, பூஜா,ரம்பா, ஆகி யோர்களும் கலந்துகொண்டு வருகிறார்கள். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் நடிகைகளுக்கு மார்க்கெட் போய்விடும் என்பதை நான் உடைத்திருக்கிறேன். மானாட மயிலாட நிகழ்ச்சி என்னுடைய மனதிற்கு நிறைவையும், குதூகலத்தையும் கொடுக்கிறது.
என்னை நம்பி எடுக்கப்படுகிற படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் இருக்கிறது.அதனால் என்னுடைய ரசிகர்கள் எதை விரும்புவார்கள்?என்று யோசித்து,அதற்கேற்றவாறு கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன். தயாரிப்பாளர்களும் இந்த விஷயத்தைப் புரிந்து வைத்திருப்பதால்தான் எனக்கேற்ற கதைகளைத் தேர்வு செய்துகொண்டு வந்து என்னை அணுகுகிறார்கள். எனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் எனக்கு அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன்.ஏனெனில்,என்னை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் என்னால் நஷ்டமடையக்கூடாது! என்று பரந்த மனதோடு கூறி ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தார் நமீதா.