Don't Miss!
- News பூமியின் ராட்சத பாம்பு இதுதான்.. 50 அடி நீள ‛வாசுகி’.. குஜராத்தில் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
க்ரீன் டீயை மோர் போல குடித்த இளம்பெண்... காண்டான கோபிநாத்
சென்னை : விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி 15 ஆண்டுகளை கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சியை கோபிநாத் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். வித்தியாசமான தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நாளைய தினத்தின் நீயா நானா நிகழ்ச்சிக்கான புதிய 2 பிரமோக்கள் வெளியாகியுள்ளது.
ஜகா வாங்கிய வலிமை, ஆர்ஆர்ஆர்...கெத்து காட்டி, தில்லாக களமிறங்கும் சிறிய பட்ஜெட் படங்கள்
நீயா நானா நிகழ்ச்சி
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி 15 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கோபிநாத். இந்த நிகழ்ச்சி அவருக்கு பெரிய அளவிலான புகழ் வெளிச்சத்தை கொடுத்துள்ளது.
ஏராளமான ரசிகர்கள்
இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது தெரிந்த விஷயம்தான். வாரம்தோறும் வித்தியாசமான தலைப்புகளில் இரண்டு தரப்பினர் விவாதிப்பது போன்ற இந்த நிகழ்ச்சியில் அனுபவமற்ற நபர்களும் சிறப்பாக பேசுவதை பார்க்க முடியும்.
கோபிநாத்தின் புகழ் வெளிச்சம்
இந்த நிகழ்ச்சியில் கடந்த 15 ஆண்டுகளாக ஒரே தொகுப்பாளராக கோபிநாத் செயல்பட்டு வருகிறார். இதையொட்டி விஜய் டிவி விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். நிகழ்ச்சி 15 ஆண்டுகள் கடந்ததையொட்டி அவர் சில மாதங்களுக்கு முன்பு நெகிழ்ச்சிப்பதிவையும் வெளியிட்டிருந்தார்.
கோபிநாத் நெகிழ்ச்சி
நமக்கான அங்கீகாரமும் மரியாதையும் நம்முடைய இடத்திலிருந்து கிடைக்கும்போது அது தரும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நுட்பமானது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நாளைய தினம் ஒளிப்பரப்பாகவுள்ள நிகழ்ச்சியின் இரண்டு பிரமோக்களை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.
நவீன ஆரோக்கிய உணவுமுறை
இதில் நவீன ஆரோக்கிய உணவுமுறையை பின்பற்றுபவர்கள் மற்றும் விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறவுள்ளது. இதையொட்டி கிரீன் டீயை சுவைக்க இளம் பெண் ஒருவருக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அவர் முகச்சுளிப்புடன் அதை செய்ய, அதை கோபிநாத் விமர்சிப்பதாக பிரமோ காணப்படுகிறது.
மருத்துவர் விளக்கம்
மேலும் மற்றொரு பிரமோவில் க்ரீன் டீயை விட அதிகமான ஆன்டி ஆக்சிடண்ட் காணப்படும் நமது பாரம்பரிய உணவுகளான இஞ்சி, புதினா, நெல்லிக்காய் குறித்து மருத்துவரின் விளக்கமும் சிறப்பாக காணப்படுகிறது. மொத்தத்தில் நாளைய நிகழ்ச்சி மிகவும் சிறப்பான தரமான சம்பவங்களை மக்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.