twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உங்களையே அழவைச்சிட்டாங்களே கோபிநாத்?

    By Mayura Akilan
    |

    Neeya Naana
    அவன் போடுற உடை பிடிக்கும், அழகானவன் கூட இருப்பதுதான் எனக்கு பிடிக்கும். அதற்காகவே நான் அவனை காதலிக்கிறேன் என்கின்றனர் இளைஞிகள்.

    அறிவானவன் செய்யும் ஒவ்வொரு செயலும் ஸ்மார்ட்டாக இருக்கும். அவனை காதலிப்பது எனக்கு போதைதான் என்கின்றனர் அறிவை விரும்புபவர்கள். பெரும்பாலான பெண்கள் அவர்களின் ஆசிரியர்கள் பற்றியும் அவர்களின் அறிவைப் பத்தியும் இதன் காரணமாகவே அவர் என்னை ஈர்க்கிறார் என்கின்றனர் இளம் யுவதிகள்.

    இது ஞாயிறன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நீயா நானா' விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியவர்கள் கூறிய வார்த்தைகள். விவாதத்திற்கு எத்தனையோ விசயங்கள் இருக்கையில் இந்த வாரம் காதலில் ஈர்ப்பது அறிவா? அழகா என்ற கருத்தினைப்பற்றி பேசினார்கள்.

    அறிவார்ந்தவர்களை ஏன் பிடிக்கிறது என்பது பேசியவர்களுக்கு, சரியாக தங்களின் கருத்துக்களை முன்வைக்கத் தெரியவில்லை. அறிவார்ந்தவர்களுக்கு இதனால் கடுப்பாகிப்போன கோபிநாத் தான் போட்டிருந்த கோட்டை கழட்டிவிட்டு போங்கப்பா போய் லவ் பண்ணிட்டு வந்து பேசுங்க என்று கூறிவிட்டு போய்விட்டார்.

    எந்த மாதிரியான ஆண் உங்களுக்குப்பிடிக்கும் என்று கல்லூரி மாணவிகளிடையே கருத்துக்கணிப்பை நடத்தியது. பெண்கள் கூறியது எல்லாம் சினிமா நடிகர்கள். எனக்கு ரன்பீர் பிடிக்கும், விராட்கோஹ்லி பிடிக்கும், என இஷ்டத்திற்கு அள்ளிவிட்டனர் அழகுதான் அவர்களை ஈர்த்திருக்கிறது. அறிவானவர்களைப் பற்றி யாருமே கூறவில்லை.

    அதேபோல் சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரிகளில் எந்த கல்லூரி பெண்களை உங்களைப் பிடிக்கும் என்று இளைஞர்களிடையே அறிவார்ந்த(!) கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. எத்திராஜ் கல்லூரி, குவின்மேரிஸ் கல்லூரி, என தங்களுக்கு பிடித்த கல்லூரி மாணவிகளைப் பற்றி கூறினார்கள். எதனால் கல்லூரி மாணவிகளைப் பிடிக்கிறது என்றும் கூறினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக குமுதம் சிநேகிதி எடிட்டரும், நடிகை லட்சுமி நாயரும் பங்கேற்றனர். காதலுக்கு ஏன் அழகும், அறிவும் பிடிக்கிறது என்பதைப்பற்றி தெரிவித்தனர்.

    அழகானவர்களை பிடிப்பவர்களுக்கு அறிவானவர்களை பிடிப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் தலைக்கணம் பிடித்தவர்கள் என்ற எண்ணம் அழகானவர்களை காதலிப்பவர்கள் கூறுகின்றனர். அதேபோல் அறிவானவர்களுக்கு அழகானவர்களை பிடிப்பதில்லை அதற்கும் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டன.

    காதலுக்கு அழகையும், அறிவையும் மட்டுமே ஏன் கேட்கின்றனர். அதையும் தாண்டி ஒரு மனிதாபிமானம் என்ற ஒன்று இருக்கிறது. இந்த செயல்தான் மனதளவில் இணையக்காரணமாக இருக்கும் அதைப்பற்றி யாருமே பேசவில்லை.

    அழகு என்பது முதலில் கண்ணுக்குள் நுழைந்தாலும் அறிவு இதயத்தை ஈர்த்தாலும் மனிதாபிமான செயல், காதலிக்கு ஒன்று என்றால் துடித்துப்போகும் குணம், காதலனுக்கு ஒன்று என்றால் உறங்காமல் விடிய விடிய பிரார்தனை செய்வது என்ற மனிதநேயச் செயல் இருக்கிறது. இதைப்பற்றி ஒருவரும் பேசவில்லை. கோபிநாத் கூட சொல்லவில்லை.

    அடுத்தவாரமாவது விவாதத்திற்கு நல்ல தலைப்பை தேர்ந்தெடுங்க கோபிநாத்.

    English summary
    Neeya Naana a talk show which brings two polarized sections of society to a single platform and encourages them to iron out their difference.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X