Don't Miss!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- News கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்.. நள்ளிரவில் திடீரென போராட்டத்தில் குதித்த பயணிகள்
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மகிழ்ச்சியின் எல்லை எது?: நீயா- நானாவில் சுவையான விவாதம்!
வீடு கட்டினால் சந்தோசம், கார் வாங்குவது, நகை போட்டுக்கொள்வது, பட்டதாரி ஆவது, பக்கத்து வீட்டுக்காரரை விட அதிகமாக பணம் வைத்திருப்பது என சந்தேசம் பற்றி பல வரையரைகளை கூறினார்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். ஆனால் பசியற்று இருப்பதுதான் என்னுடைய மகிழ்ச்சி என்றார் இளைஞர் ஒருவர். பசியின் கொடுமையை பல நூறு ஆண்டுகளுக்கு கொடிது கொடிது வறுமை கொடிது என்று பாடியுள்ளார் ஔவையார்.
அதேபோல் நடுத்தர வயதைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் வலியற்ற ஆரோக்கியமான வாழ்க்கைதான் எனக்கு மகிழ்ச்சி என்றார். இன்றைக்கு பெரும்பாலான மனிதர்கள் ஏதாவது ஒரு நோயுடனோ, அந்த நோய் ஏற்படுத்தும் வலியுடனோ வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதனால்தான் வலியற்ற வாழ்க்கை தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அந்த பெண்மணி.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன், சிந்தனையாளர் டாக்டர் மோகன், எழுத்தாளர், சமூக பார்வையாளர் பாதர் ஜெகத் கஸ்பார் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
இன்றைய கால கட்டத்தில் எதையாவது ஒன்றை அடைவதுதான் சந்தோசம் என்கின்றனர். அதற்காக அவர்கள் இழப்பதை மறந்து விடுகின்றனர். ஆனால் நான் நம்பும் விசயத்தை மட்டும் செய்கிறேன் அதுதான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் மனுஷ்ய புத்ரன்.
இன்றைக்கு மகிழ்ச்சி என்பது வெளியே இருந்து திணிக்கப்படுகிறது என்றார் மனுஷ்ய புத்ரன். நாம் வெளிப்படையாக இருந்தால் மகிழ்ச்சியை நேருக்கு நேராக சந்திக்கலாம் என்றார். நாம் அடைபட்டுப் போயிருப்பதால்தான் சந்தோசம் நமக்கு கிடைப்பதில்லை என்றும் கூறினார்.
மகிழ்ச்சி என்றால் என்ன என்று பேசிய ஜெகத் கஸ்பார், நம்முடைய மகிழ்ச்சியை நாம்தான் தீர்மானிக்கவேண்டும் என்றார். புற பொருட்களின் வன்முறையில் இருந்து கிடைக்கும் விடுதலை கூட சிலருக்கு மகிழ்ச்சியைத் தரும் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு சிறப்பு அழைப்பாளர் டாக்டர் மோகன், மகிழ்ச்சி என்பது பகிர்ந்து கொள்வது என்றார். இந்தியாவைப் பொருத்தவரை அமெரிக்காவைப் போல, ஜப்பானைப் போல வல்லரசாகவேண்டும் என்பார்கள். ஆனால் உலக அளவில் அதிகம் தற்கொலைகள் நிகழ்வது ஜப்பானில்தான் என்றார். காரணம் அவர்கள் மகிழ்ச்சியுடன் இல்லை. பணமும், பொருளாதார வல்லமை மட்டும் மகிழ்ச்சியல்ல உலகில் உள்ள மிகச்சிறிய நாடான அதுவும் இந்தியாவிற்கு அருகில் உள்ள பூடான் நாட்டு மக்கள்தான் உலக அளவில் மகிழ்ச்சிகரமாக இருக்கின்றனர் என்று டாக்டர் மோகன் கூறினார். ஆனால் அதை யாரும் ஒத்துக்கொள்வதில்லை. மகிழ்ச்சி என்பது வேறு எங்கும் இல்லை. அது நமக்குள்தான் இருக்கிறது. பகிர்ந்து கொள்வதை கற்றுக்கொடுத்தால் அதுதான் உண்மையான மகிழ்ச்சி என்றார்.
ஆயிரம் ஆசைகள் இருக்கலாம் பசியோடு இருப்பவனுக்கு உணவு கிடைப்பதுதான் மகிழ்ச்சி. வலியற்ற ஆரோக்கியமான வாழ்க்கை அதுதான் மகிழ்ச்சி. எனவே சந்தோசத்தை வெளியே தேடாதீர்கள் அது உள்ளே இருக்கிறது. அதை பகிர்ந்து கொடுங்கள்
உணர்வுகளை, வருத்தங்களை, இருப்பதை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறி முடித்தார் கோபிநாத்
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?