Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
Bigg Boss 3: அதுவே டுபாக்கூர் காதல், இதில் கள்ளக் காதல் வேறா?
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் நடக்கும் கூத்தை பார்த்து தான் சமூக வலைதளங்களில் சிரிப்பாய் சிரிக்கிறார்கள்.
கவின் அவர் பாட்டுக்கு சீரியல்கள், படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சாக்ஷி ஏதோ கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருந்தார். லாஸ்லியா நியூஸ் வாசித்துக் கொண்டிருந்தார்.
இப்படி அவரவர் வேலையை மட்டும் பார்த்தவர்களை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்து முக்கோண காதல் கதையில் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார் பிக் பாஸ்.
சாக்ஷி
கவினுக்கு சாக்ஷி மீது தான் முதலில் காதல் வந்தது. சரி, வழக்கமாக பிக் பாஸ் வீட்டில் ஒரு காதல் உருவாகும் என்று நினைத்து பார்வையாளர்களும் சும்மா இருந்தார்கள். இந்நிலையில் தான் ஒரு ஓரமாக இருந்து மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்த லாஸ்லியாவை கவினுடன் கோர்த்துவிட்டு முக்கோண காதல் கதையை உருவாக்கினார்கள்.
லாஸ்லியா
முக்கோண காதல் கதை ஆரம்பித்தபோது நன்றாகத் தான் இருந்தது. ஆனால் அதன் பிறகு அந்த 3 பேரையும் பார்த்தாலே பார்வையாளர்களுக்கு பத்திக்கிட்டு வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே காதலி இருக்கும் கவினை சாக்ஷி போலியாக காதலிக்கிறார். இதில் மூன்றாவது ஆளாக வந்த லாஸ்லியாவை ஏதோ அடுத்தவர் புருஷனுடன் கள்ளக் காதல் வைத்திருப்பது போன்று சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள். லாஸ்லியா துரோகி என்றால் சாக்ஷியும் துரோகி தான்.
காதலி
கவினுக்கு ஏற்கனவே காதலி இருப்பது சாக்ஷிக்கும், லாஸ்லியாவுக்கும் நன்றாகத் தெரியும். கவினும் காதலி இருப்பதை மறந்துவிட்டு அந்த இரண்டு பெண்களுடன் ஆட்டம் போடுகிறார். வெளியே சென்றால் இந்த மூஞ்சியை எல்லாம் நான் பார்ப்பேனா என்று கூறிய சாக்ஷி கவினை உண்மையாக காதலிக்கிறார் என்பதை ஏற்க முடியவில்லை. வெளி உலக தொடர்பே இல்லாமல் இருப்பதால் கவினுடன் ஒட்டி உறவாடுகிறார் சாக்ஷி. அவ்வளவு தான். அதற்கு பெயர் காதல் இல்லை. பிக் பாஸ் தான் காதல் சாயம் பூசி வேடிக்கை பார்க்கிறார்.
யாஷிகா
கடந்த சீசனில் யாஷிகாவை காதலிப்பதாக தெரிவித்தார் மகத். ஒரே இடத்தில் பல நாட்கள் வெளி உலக தொடர்பே இல்லாமல் இருக்கும்போது ஈர்ப்பு ஏற்படத் தான் செய்யும் என்றார் மகத். அந்த ஈர்ப்பு தான் கவினுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இரண்டு பெண்கள் மீது ஏற்பட்டுள்ளது தான் வேடிக்கை. கவின் இன்னும் டிவி சீரியல் மூடில் இருந்து வெளியே வரவில்லை போன்று. முக்கோண காதல் டிராமாவை சீக்கிரம் முடித்து வைத்து அடுத்த கதையை துவங்கவும் பிக் பாஸ் என்பதே பார்வையாளர்களின் கோரிக்கை.