Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கேப்டன்ஸி டாஸ்க்குன்னா இப்படி இருக்கணும் பிக் பாஸ்.. சர்வைவர் கேப்டன் டாஸ்க்கை கொண்டாடும் ஃபேன்ஸ்!
சென்னை: சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியின் முதல் வாரத்திற்கான கேப்டன்கள் யார் யார் என்பதற்கான கடுமையான போட்டி நேற்றைய எபிசோடில் ஒளிபரப்பப்பட்டது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் எனும் ரியாலிட்டி ஷோ கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆரம்பித்து அட்டகாசமாக போய்க் கொண்டிருக்கிறது.
முதல் வாரத்திற்கான இரு கேப்டன்களை தேர்வு செய்யும் டஃப் டாஸ்க்கை பார்த்த ரசிகர்கள் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை வம்புக்கு இழுத்து கலாய்த்து வருகின்றனர்.
கடலில் தத்தளிக்கும் போட்டியாளர்கள்.. அலற விடும் அர்ஜூன்.. பகீர் கிளப்பும் சர்வைவர் புரமோ!
இதுவும் காப்பி தான்
பிக் பாஸ் நிகழ்ச்சி எப்படி வெளிநாட்டு டிவி தொடரான பிக் பிரதரை பார்த்து காப்பி அடிக்கப்பட்டதோ அதே போலத்தான் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியும் பக்கா காப்பி தான். சர்வைவர், பிரைமல் சர்வைவர், நேக்கட் சர்வைவர் என ஏகப்பட்ட வெர்ஷன்கள் உலகம் முழுக்க பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன.
ஆப்பிரிக்கா காட்டில்
சர்வைவர் தமிழ் நிகழ்ச்சிக்காக நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட ஒட்டுமொத்த சர்வைவர் குழுவும் ஆப்பிரிக்கா காட்டிற்கே சென்று இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதற்காகவே தனியாக அந்த தீவே ஒரு செட் போல உருவாக்கப்பட்டதா? என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் முன் வைத்து வருகின்றனர். தெரியாத தீவு மற்றும் காட்டுப் பகுதி என்றால் மோசமான வன விலங்குகள் மற்றும் விஷப்பூச்சி அபாயம் இருப்பதால் ஷோ நடத்துபவர்கள் அதிகளவில் இந்த விஷயத்தில் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள் என்பதும் உண்மை.
90 நாட்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் ஒரு வீட்டில் இருந்து சர்வைவ் பண்ணுவது போலவே இந்த சர்வைவர் நிகழ்ச்சி 90 நாட்கள் ஒரு தனித்தீவில் சக போட்டியாளர்களுடன் இருந்து போட்டியிட்டு கடைசி வரைக்கும் தனது ஆரோக்கியம், பலம் மற்றும் அறிவை பயன்படுத்தி வெற்றி காண வேண்டும்.
ஒரு கோடியப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரிசுத் தொகை 50 லட்சம் ரூபாயாக உள்ள நிலையில், சர்வைவர் நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு கிடைக்கப் போகும் பரிசுத் தொகை ஒரு கோடி ரூபாயாம். 50 லட்சத்துக்கே இங்கே இந்த சண்டை நடக்குதுன்னா ஒரு கோடிக்கு அங்கே எந்த அளவுக்கு சண்டை நடக்கும் என்கிற ஆர்வத்திலேயே ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த ஷோவை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
தினமும் அர்ஜுன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் போல வாரத்திற்கு இரு முறை மட்டும் இங்கே ஹோஸ்ட் வராமல் தினமும் நடிகர் அர்ஜுன் போட்டியாளர்கள் அருகே இருந்து கொண்டு அவர்களை பெண்டு கழட்டும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கொடுக்கப்படும் டாஸ்க்குகளும் நிஜமாகவே டஃப்பாக இருக்கிறது.
கேப்டன்ஸி டாஸ்க்
காடர்கள் மற்றும் வேடர்கள் என சர்வைவர் தமிழ் போட்டியாளர்களை இரு பிரிவாக பிரித்துள்ளார் நடிகர் அர்ஜுன். நேற்று இரவு ஒளிபரப்பான எபிசோடில் முதல் வாரத்திற்கான கேப்டன்கள் யார் என்பதை தேர்வு செய்யும் கேப்டன்ஸி டாஸ்க் கொடுக்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே போட்டியாளர்கள் ஓட்டுப் போட்டு இருவரை தேர்வு செய்ய அந்த இருவருக்கும் இடையே கடும் போட்டி வைத்து தலைவரை தீர்மானித்த விதம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பிக் பாஸ்க்கு அட்வைஸ்
கேப்டன்ஸி டாஸ்க்ன்னா இப்படி இருக்கணும் அதிக நபர்கள் தேர்வு செய்யும் நபரை அழகாக தலைவராக்கி விடாமல் அவர்கள் இருவரில் யாருக்கு ரியல் திறமை இருக்கிறது என்பதை பார்த்து சர்வைவரில் கேப்டனாக்குகின்றனர் என நெட்டிசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் வம்புக்கு இழுத்து கலாய்த்து வருகின்றனர்.
காடர்கள் கேப்டன்
பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்த நடிகை காயத்ரி ரெட்டி மற்றும் லேடி கேஷ் என இருவரை காடர்கள் சார்பாக கேப்டன் பதவிக்கு தேர்வு செய்தனர். லேடி கேஷுக்கு அதிக ஓட்டுக்கள் விழுந்தாலும் போட்டியில் காயத்ரி ரெட்டி வெற்றிப் பெற்று காடர்களின் முதல் வார தலைவியாக மாறி உள்ளார்.
வேடர்கள் கேப்டன்
அதே போல வேடர்கள் பக்கம் கேப்டனாக லக்ஷ்மி பிரியா சந்திரமெளலி தேர்வானார். அவருக்கும் விளையாட்டு வீராங்கனை ஐஸ்வர்யா கிருஷ்ணனுக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது. அதிக பாட்டில்களை சேவ் செய்து லக்ஷ்மி பிரியா சந்திரமெளலி கேப்டனாக மாறினார். வெற்றிப்பெற்ற கேப்டன்களுக்கு மட்டுமே டென்ட்டில் படுக்க அனுமதி கிடைக்கும் என அர்ஜுன் கூறியதும் மற்றவர்களின் முகங்கள் அப்படியே மாறிப் போயின. இந்த கேப்டன்கள் இருவருக்கும் இந்த வாரம் என்னவெல்லாம் சுமைகள் வரப் போகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.