கவின் முகத்தை 'பாஸ்' பண்ணி பாருங்களேன்.. சும்மா உள்ளார இருந்துகிட்டு கெத்து காட்டுறாருபா சேரன்!
Recommended Video
சென்னை: சேரன் கவினுக்கு எழுதியிருக்கும் கடிதம் குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் உள்ள கவின், லாஸ்லியாவிடம் தன் மீதான காதலை சொல்லுமாறு வலியுறுத்தியது நேற்றைய எபிசோடில் ஒளிபரப்பானது. இதனை கவனித்த சேரன் இன்று கவினுக்கு அதுதொடர்பாக இது நியாயமா என் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்த புரமோ வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பாஸ் பண்ணி பாருங்க
வைஷ்ணவியும் சுஜாவாருணியும் வேஸ்ட். சேரன் சார் பாரு இன்னும் வெளில கூட வரல சும்மா உள்ளார இருந்துகிட்டு கெத்து காட்டுறாருபா. கவின் முகத்தை மட்டும் பாஸ் பண்ணி பாருங்களேன். என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
லவ்வர்ஸ் பூங்கா
லாஸ்லியாவுக்கும் கவினுக்கும் அது பிக்பாஸ் வீடு இல்ல அது லவ்வர்ஸ் பூங்கா! லவ்வர்ஸ் பூங்கால கூட இவ்ளோ நேரம் உட்கார்ந்து பேச முடியாதுனு நினைக்கிறேன்! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
எகிறி குதிச்சு ஓடிபோங்க
லாஸ்லியா கவின் பெட்ரூம எட்டி பாத்து யாரும் கேள்வி கேக்கல, ஒரு ஷோ இருக்கும் போது நாலு பெரு நாலு கேள்வி கேக்கத்தான் செய்வாங்க, புடிக்கலான சுவர் எகிறி குதிச்சு ஓடி போங்க என்கிறார் இந்த நெட்டிசன்.
சொந்த புத்தி கிடையாது
யார் என்ன சொன்னாலும் அதில் உள்ள நல்ல விஷயங்களை புரிந்து கொள்ள சொந்த புத்தி இருக்கணும் இந்த சீசனில் பெரும்பாலானோருக்கு சொந்த புத்தி கிடையாது என்று சொல்கிறார் இந்த நெட்டிசன்.
ஏன் கவின கேட்கல?
இன்னைக்கு இவரு கேட்டதுக்கு அது அவங்க இஷ்டம் உனக்கு என்னனு சேரன கேக்குற ஆளுங்க, ஏன் கவின் இப்பவே சொல்லுனு லாஸ்லியாவ டார்ச்சர் பண்ணப்ப சும்மா இருந்தீங்க அது அவ இஷ்டம். ஏன் இப்பவே சொல்ல சொல்றன்னு கேட்க வேண்டிய தானே என்கிறார் இந்த நெட்டிசன்.
விடுங்க பாஸ்
கமல் சொல்லியே ஸ்டாப் பண்ணல.. எப்படியும் வெளியே வந்து கல்யாணம் பண்ணிட்டு கொஞ்ச நாள்ல டைவர்ஸ் ஆகதான் போகுது விடுங்க பாஸ் என்கிறார் இந்த நெட்டிசன்.
ஃபோர்ஸ் பண்ணுது
கஸ்தூரி'கிட்ட அன்னிக்கு தனி மனித உரிமை,விருப்பம்'னு சொன்ன அதே வாய்தான் நேத்து லாஸ்லியாவ ஃபோர்ஸ் பண்ணுது. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











