Don't Miss!
- Sports "ரோகித் சர்மா"வின் பாகுபலி மொமண்ட்.. மக்கள் கேப்டனாக மாறிய ஹிட்மேன்.. ஹர்திக்கை பொளக்கும் ரசிகர்கள்!
- News லோக்சபா தேர்தல்.. வெளியானது பாஜகவின் 7 வது வேட்பாளர் பட்டியல்.. நடிகை நவ்நீத் ராணாவுக்கு வாய்ப்பு
- Automobiles ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
- Lifestyle எலுமிச்சை சாறுடன் இந்த 3 பொருட்களில் ஒன்றை சேர்த்து குடிப்பது பானை மாறி உள்ள தொப்பையை சர்ருனு குறைக்குமாம்...!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கும் கவின்.. 'அந்த விளையாட்டுக்கு' பெரும் தடையாக இருக்கும் சேரன்!
Recommended Video
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனின் பெயரை நாமினேட் செய்த கவின், அதற்காக கூறும் காரணத்தை கேட்டு நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினுக்கு, ஆரம்பத்தில் இருந்தே சேரனை கண்டால் பிடிக்கவில்லை. போதாகுறைக்கு லாஸ்லியாவை காதலிக்கும் கவின், சேரன் குறித்து இல்லாததையும் பொல்லாததையும் பேசி வருகிறார்.
நேற்று ஃபுரூட்டி காலராக வந்த நபர் சேரன் லாஸ்லியாவிடம் பாசமாக இருப்பது டிராமா என கவின் சொன்னதை வெட்டவெளிச்சமாக கூறிவிட்டார். இதனால் கவினுக்கு சக போட்டியாளர்கள் முகத்தை காணவே சங்கடமாக உள்ளது.
சிக்கனை வைத்து சேரனை அசிங்கப்படுத்திய லாஸ்லியா.. கமல் முன்னிலையிலேயே பழிக்குப்பழி!
கவின் நாமினேட்டிங்
இந்நிலையில் திங்கள் கிழமையான இன்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுகிறது. இந்த வாரம் ஓபன் நாமினேஷன் என தெரிகிறது. இதில் கவின், சேரனையும் ஷெரினையும் நாமினேட் செய்கிறார்.
கடுப்பான நெட்டிசன்கள்
அதற்கு விளக்கம் கொடுக்கும் அவர், சேரன் பல தேசிய விருதுகள் வாங்கிவிட்டார் பல சாதனைகள் புரிந்துவிட்டார். ஆகையால் இருவரும் வெற்றியை பார்க்காத இந்த பசங்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என கேட்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகிவிட்டனர்.
|
பக்கத்து இலைக்கு பாயாசம்
கவின் : வெற்றின்னா என்னன்னு தெரியாத இந்த பசங்க இந்த வெற்றியை பார்க்கட்டும் என்றது.. பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பது போல இருக்கு.. (அவருக்கு ஆசை இல்லையாம்.. யாரு சொன்னா அவரே சொன்னார்) என்று கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்.
|
அதான் ஞாபகம் வருது
கவின் இன்று புது முகங்களுக்கு வழி விடுங்க என்று சொன்னத பார்க்க.. அக்கா ‘'ஜூலி'' கேமெரா முன்னாடி நின்று பொது ஆள் ஓராள் இத வெல்ல கூடாதா.. சொல்லுங்க மக்களே நான் வெல்ல கூடாதா என அட்டகாசம் பண்ணினது தான் ஞாபகம் வருது. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
பூசி மொழுகிறது
கவின் இவ்வளவு காலமும் அறைக்குள்ள நாமினேஷன் செய்யும் போது தெரியலையா அவரு தேசிய விருது வாங்கியவர் என்று.. அப்ப எல்லாம் வீட்டில் நடந்த பிரச்சனை.. இப்ப வெளிய என்றவுடன் பூசி மொழுகிறது.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
வாயை கிளறலாம்
தலைவி இருக்கும் வரைக்கும் பயமில்லை.. இனிமேல் ஓபன் நாமினேஷன் தான் நடக்கனும் அப்பதான் கவின் வாயைக் கிளற முடியும், உண்மையை எல்லாம் சிதற வைக்க முடியும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
வேற ரீசன்
ஓபன் நாமினேஷன் என்பதால் இந்த காரணத்த சொல்றானா? கன்ஃபெஷன் ரூம்னா வேற ரீசன சொல்லிருப்பான் பெரிய ஸ்டோரியா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
கவின் குப்பை
கவின் வெளித்தோற்றம் பெர்சனாலிட்டி உள்தோற்றம் குப்பை. குள்ளச்சி, காக்கா, சைக்கிளில் செல்பவர் என பிறரை மட்டம் தட்டி பேசினான். சேரன் லாஸ்லியாவை விட்டு விலகி இருப்பது அவருக்கு நல்லது. காதல் கண்ணைமறைக்கும். அவரது அன்பை புரிந்துகொள்ளும் மனநிலையில் லாஸ்லியா இல்லை என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
உனக்கு தேவைதான் ஷெரின்
நேற்று கவின் ஓரமா தனியா இருக்கும் போது பாவப்பட்டுப் போய் கதைச்சல்ல.. உனக்கு இது தேவைதான் ஷெரின் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
சேரன் பெரும் தடை
கவினுக்கு காதல் விளையாட்டு விளையாட சேரன் பெரும்தடை! அதான் இந்த காண்டு! என்று கூறுகிறர்ர் இந்த நெட்டிசன்.
|
மத்தவங்க சொன்னா தப்பு
அப்படியே பார்த்தாலும் சாண்டியைவிட ஷெரின் ஃபேமஸ் கம்மிதான். அதனால நீ அவன சொல்லி இருக்கலாமே, கேட்டா ஃபிரன்ட்ஸ்.. நீ செல்பிஷ் கேம் விளையாடலாம் ஆனா மத்தவங்க சொன்னா தப்பு.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
நேத்து புலம்பின
கவின் அவ்வளோ தைரியமான ஆளா இருந்தா, நேத்து ஷெரின்கிட்ட சேரன் பத்தி புலம்பின காரணம் எல்லாம் சொல்லி பண்ண வேண்டியதுதான. நேஷனல் அவார்டு வாங்கினவருன்னு இப்பதான் தெரியுதா? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன். நேர்மைடா நியாயம்டா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.