twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன தான் சீரியல்னாலும் நியாய தர்மம் வேண்டாமா... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

    |

    சென்னை : கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள முத்தழகு சீரியலின் ப்ரோமோவை நெட்டிசன்கள் கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர். என்ன தான் சீரியல் என்றாலும் அதற்காக இப்படியா...மக்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என கடும் கோபமாக கேள்வி எழுப்பியதுடன், கேலியும் செய்து வருகின்றனர்.

    டிஆர்பி.,யை கைப்பற்ற அனைத்து டிவி சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது சீரியல்களை களம் இறக்கி வருகின்றன. சில சேனல்கள் மக்களிடம் வரவேற்பை பெற்ற பழைய சீரியல்களை மீண்டும் ஒளிபரப்பி வருகின்றன. இந்த சீரியல்களை மக்களை பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக பல ப்ரோமோக்களும் வெளியிடப்பட்டு வருகிறது.

    லோஹிப் சேலையில் நடிகை ஷிவானி நாராயணன்.. செம ஹாட்.. பதறிப்போன ரசிகர்கள்!லோஹிப் சேலையில் நடிகை ஷிவானி நாராயணன்.. செம ஹாட்.. பதறிப்போன ரசிகர்கள்!

    எல்லாமே காப்பி தானா

    எல்லாமே காப்பி தானா

    விஜய் டிவியில் டாப் ரேட்டிங்கில் இருந்த பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்கள் சமீப காலமாக டல் அடிக்க துவங்கி விட்டன. இதனால் இந்த சீரியல்களின் இடங்களை பிடிப்பதற்காக மற்ற சீரியல்கள் போட்டி போட துவங்கி விட்டன. டிவி சீரியல்களின் டைட்டில் மட்டுமல்ல, கதையும் கூட பழைய சினிமாக்களின் கதையாக தான் உள்ளது.

    விஜய் டிவி முத்தழகு சீரியல்

    விஜய் டிவி முத்தழகு சீரியல்

    பருத்திவீரன் ப்ரியாமணி போல் பேசப்படும் என துவங்கப்பட்ட சீரியல் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியல். வழக்கமாக காட்டப்படும் ஏழை குடும்பத்தில் விவசாயம் செய்யும் ஹீரோயின், பணக்கார ஹீரோ. இருவருக்கும் விருப்பம் இல்லாமல் திருமணம் நடக்கிறது. இவர்களை சேர்த்து வைப்பதற்காக ஒரு பாட்டி கேரக்டர். ஹீரோ, ஹீரோயினை சேர்த்து வைப்பதற்காக பாட்டி எடுக்கும் முயற்சி தான் ப்ரோமோவாக வெளியிடப்பட்டுள்ளது.

    ஹீரோவை தூக்கும் ஹீரோயின்

    ஹீரோவை தூக்கும் ஹீரோயின்

    இந்த ப்ரோமோவில், மிக சாதாரண ஒரு முள் ஹீரோயின் காலில் குத்த வேண்டும். அப்போது ஹீரோ உதவ வேண்டும். இருவருக்கும் லவ் வர வழைக்க பிளான் செய்கிறார் பாட்டி. ஆனால் டைரக்டரோ ட்விஸ்ட் வைத்து அந்த முள் ஹீரோ காலில் குத்துகிறது. ரத்தம் கூட வராத நிலையில், ஹீரோயின், ஹீரோவை தூக்கிக் கொண்டு நடக்கிறார். அதுவும் மலைக்கோயில் படிகளில் தூக்கிக் கொண்டு ஏறுகிறார். இந்த ப்ரோமோவை தான் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

    ஒரு நியாய, தர்மம் வேண்டாமா

    ஒரு நியாய, தர்மம் வேண்டாமா

    என்ன தான் சீரியல் என்றாலும் ஒரு நியாய, தர்மம் வேண்டாமா...ஒரு மிக சாதாரண முள் குத்தியதற்காக நடக்க முடியாமல் போகும். அப்படி இருந்தாலும் ஹீரோயின் பலசாலி என்பதை காட்ட ஹீரோவை, அதுவும் மலைக்கோயிலுக்கு தூக்கி செல்வதெல்லாம் ரொம்ப ஓவர். மக்களை இவர்கள் என்ன நினைத்து விட்டார்கள்...எதை காட்டினாலும் பார்ப்பார்கள் என நினைத்து விட்டார்களா என பலவிதமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    English summary
    Netizens troll Vijay tv Muthazhagu serial promo. In this promo heroine lifts the hero and walks to temple which is in the top of the hill. Netizens say that most of the tv serials has no logic in the storyline.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X