twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடேய் ரொம்ப ஓவரா போறீங்கடா.. இப்படியா காதில் பூ சுற்றுவது.. பாக்கியலட்சுமி சீரியல் அலப்பறை!

    |

    சென்னை : பலரின் மனம் கவர்ந்த பாக்யலட்சுமி தொடரில் தற்போது கோபி, பாக்யாவை ஏமாற்றி விவகாரத்து வாங்குகிறார். இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் இந்த சீரியலை ட்ரோல் செய்து வருகின்றனர்.

    இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.

    இத்தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது.

    ஏ.ஆர்.ரஹ்மானுடன் கரம் கோர்க்கும் இளையராஜா...Request accepted...தீயாய் பரவும் ட்வீட் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கரம் கோர்க்கும் இளையராஜா...Request accepted...தீயாய் பரவும் ட்வீட்

    பாக்கியலட்சுமி

    பாக்கியலட்சுமி

    பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகள் கொண்டாடும் முக்கியமாக சீரியல்களில் ஒன்றாகும். இந்த சீரியலில் பாக்யலட்சுமி கதாபாத்திரத்தில் சுசித்ரா ஷெட்டி நடித்து வருகிறார். மாமனார், மாமியார்,கணவர், குழந்தைகள் என ஒட்டுமொத்த குடும்பத்தையும் அனுசரித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

    ராதிகாவுடன் உறவில்

    ராதிகாவுடன் உறவில்

    இந்த சீரியலின் வெற்றிக்கு காரணமே பாக்கியா என்று சொல்லலாம் அவ்வளவு எதார்த்தமாக நடித்து வருகிறார். அவரது கணவர் கோபி, கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ராதிகாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். ராதிகா மீது உள்ள காதலால் மனைவி பாக்யாவை விவாகரத்து செய்ய பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார்.

    கோர்ட்டிற்கு வரும் பாக்யா

    கோர்ட்டிற்கு வரும் பாக்யா

    பிடிக்காத மனைவியுடன் வாழ்ந்து வருவதாக கூறி ராதிகாவை நம்பவைத்து இருக்கிறார் கோபி. அதேபோல பாக்யாவை ஏமாற்றி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டார். விவகாரத்திற்காக பாக்யாவை கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார் கோபி. நீதிபதியும் அவர்களை விசாரித்துவிட்டு கவுன்சிலிங்கிற்கு அனுப்பி விடுகிறார். கவுன்சிலிங்கின் போதும் பாக்யாவை வெளியில் உட்கார வைத்துவிட்டு கோபி மட்டும் உள்ளே போய் பேசிவிட்டு வருகிறார். இதையடுத்து 6 மாதம் கழித்து மீண்டும் வரவேண்டியது இருக்கும் என்று வழக்கறிஞர் கூறுகிறார் இதுதான் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

    இதுகூடவா தெரியாது

    இதுகூடவா தெரியாது

    இந்த சீரியலை பார்க்கும் போது மிகவும் கடுப்பாகத்தான் இருக்கிறது. விவாகரத்து பத்திரத்தில் வேண்டுமானால் கோபி ஏமாற்றி கையெழுத்து வாங்கி இருக்கலாம். ஆனால், குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு கூடவா எதற்காக நாம் நீதிமன்றம் வந்து இருக்கிறோம் என்பது தெரியாது. என்னத்தான் எதுவுமே தெரியாத அப்பாவி மனைவியா இருந்தாலும் கோர்ட்டுக்கு வந்த பிறகு கூடவா விவரம் தெரியாது.

    கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா

    கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா

    என்னத்தான் சீரியலா இருந்தாலும் கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா காதில் எவ்வளவு தான் பூ சுத்துவீங்க என்றும், ரொம்ப ஓவரா போறீங்கடா என்றும் இந்த சீரியலைப் பார்த்து ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், இல்லத்தரசிகளோ... படுபாவி கோபி... பாக்யாவை இப்படி ஏமாத்துறானு கோபியை வசைபாடி வருகின்றனர்.

    English summary
    Netizens trolled Baakiyalakshmi Serial
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X