Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நினைத்தாலே இனிக்கும்… வைரல் ப்ரோமோ !
சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நினைத்தாலே இனிக்கும் என்ற புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
இத்தொடரில், நாயகி தொடரில் நடித்த சுரேஷ் கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
யாரடி நீ மோகினி சீரியலின் முடிவு உங்கள் கையில்… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஜீ தமிழ் !
இந்த தொடரின் அறிவிப்பு ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
3 வயதில் ஜெசிக்காவுக்கு இப்படி ஒரு நோய்.. நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்
ஜீ தமிழ் தொலைக்காட்சி
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஜீ தமிழ் தொலைக்காட்சி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சேனலுக்கென்றே பிரத்யேகமாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தொலைக்காட்சி தொடர்கள் முதல் ரியாலிட்டி ஷோக்கள் வரை, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கிறது ஜீ தமிழ்.
சர்வைவர்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஒரு வித்தியாசமான ரியாலிட்டி ஷோவை ஜீ தொலைக்காட்சி நடத்த உள்ளது. ஆளில்லாத் தனித் தீவில் போட்டியாளர்கள் 100 நாட்கள் தங்கி இருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு சர்வைவர் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் உணவு தண்ணீர், தங்குமிடம் என அனைத்து அடிப்படைத் தேவைகளையும் போட்டியாளர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த ரியாலிட்டி ஷோ குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
தனி ரசிகர்கள்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல விறுவிறுப்பான மெகாஹிட் சீரியல்களையும் ஒளிபரப்பி உள்ளது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்காகவே, தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அது மட்டுமின்றி, இந்த சீரியல்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கென்று தனித்தனியே ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. சின்னத்திரைக்கு முதல் முறையாக ஜீ தமிழ் வழியே அறிமுகமான பல புதுமுகங்கள், இப்போது பிரபலங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளன.
ஜீ தமிழ் டிவி புது முயற்சி
இந்த தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த யாரடி நீ மோகினி தொலைக்காட்சித் தொடர்ந்து முடிவடைய உள்ளது. இந்த கிளைமாக்ஸ் காட்சியை முடிவு செய்யும் முடிவை ரசிகர்களிமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது வரை எந்த தொலைக்காட்சியும் சீரியலின் முடிவை ரசிகர்களிடம் விட்டது இல்லை. முதன்முறையாக இந்த புது முயற்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சி கையில் எடுத்துள்ளது.
யாரடி நீ மோகினி
இதில் 3 முடிவுகளை தயாரிப்பு குழு ஆப்ஷனாக கொடுத்துள்ளது. முதல் ஆப்ஷன் முத்தரசன், வெண்ணிலா இருவரும் ஸ்வேதாவை மன்னித்துவிடுவது, இரண்டாவது ஆப்ஷன் வெண்ணிலா ஸ்வேதாவை பழிவாங்க வேண்டும், 3வது ஆப்ஷன் சித்ராவின் ஆவி ஸ்வேதாவை பழி வாங்க வேண்டும் என 3 விதமான கிளைமாக்ஸ்களை கொடுத்துள்ளது. இது ரசிகர்கள் அதிக படியாக தேர்வு செய்யும் முடிவு கிளைமாக்ஸாக ஒளிபரப்பாகும்.
நினைத்தால இனிக்கும்
யாரடி நீ மோகினி தொடருக்கு பிறகு எந்த தொடர் ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய சீரியல் குறித்த ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அந்த சீரியலுக்கு நினைத்தால இனிக்கும் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த தொடரில் ஆயுத எழுத்து தொடரில் பிரபலமான ஆனந்த் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார்.
அஞ்சலி இனிப்பு கடை
நடிகை அனுராதவின் கணவர் தான் சுரேஷ்கிருஷ்ணா, இவர் சன் தொலைக்காட்சியில் முதன்முதலாக முத்தாராம் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கினார். அசோகவனம்,உயிர்மை, தெய்வம் தந்த வீடு, சிவசங்கரி,சந்திரலேகா என ஏராளமான சீரியலில் நடித்துள்ளார்.