twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Kanmani Serial: தம்புடி காசுக்கு வழி இல்லேன்றானுவ.. இப்படி மொடக்கு மொடக்குன்னு குடிக்க மட்டும்?

    |

    சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் விஜயலட்சுமியின் மூத்த மகள் சுகன்யாவுக்கும், மருமகனுக்கும் கூட இப்போ பிரச்சனை ஆரம்பமாயிருச்சு. இதை வரும் ஞாயிறு 9:30 மணி முதல் 10:30 மணி வரை ஒளிபரப்பும் ஸ்பெஷல் ஷோவில் காண்பிக்கறாங்க.

    தினம் குடிச்சுட்டு வரும் கதிரேசனை கண்டிக்கிறாள் அவன் மனைவி. நான் அப்படித்தான்டி குடிப்பேன்..கையில் தம்புடி காசுக்கு வழி இல்லை.. என்னை என்ன பண்ண சொல்றேன்னு ஆடிக்கிட்டே பொண்டாட்டிகிட்ட வர்றான் கதிரேசன்.

    தப்பு கதிரேசா... நீ இப்படி அவகிட்டே பேசறது தப்பு.. இப்படி நீ நடந்துக்கறதும் தப்பு அவ்ளோதான் நான் சொல்லுவேன்னு விஜயலட்சுமி அம்மாவும் சொல்றாங்க. குடும்பமே அடுத்து நடக்க இருக்கும் கலவரத்துக்காக வெயிட்டிங்.

    25 வது கல்யாண நாள்

    25 வது கல்யாண நாள்

    கிருஷ்ணவேணிக்கும் ராஜதுரை சித்தப்பாவுக்கும் வரும் ஞாயிறு அன்று 25 வது கல்யாண நாள் கொண்டாட இருக்காங்க. அதைத்தான் சன் டிவி இரவு 9:30 மணி முதல் 10:30 மணி வரை சிறப்பு நேரமாக அறிவித்து ஒளிபரப்ப இருக்காங்க. இந்த நேரத்தில் விஜயலட்சுமியின் மூத்த மகள் சுகன்யாவும் குடித்துவிட்டு வந்து நிற்கும் புருஷனை கோவத்தில் சத்தம் போட்டுக்கொண்டு இருக்கா.

     தெரு மார்க்கெட்

    தெரு மார்க்கெட்

    கோயிலுக்கு போனாலும், மார்க்கெட்டுக்கு போனாலும்.. அவ்வளவு ஏன், தெருவில் காலடி எடுத்து வச்சாலே நாக்கை புடுங்கிக்கற மாதிரி கேட்கறாங்க. ஏம்மா உன் புருஷன் எப்போது பார்த்தாலும் குடிச்சுக்கிட்டு நிக்கறானேன்னு... நாக்கை புடுங்கிக்கற மாதிரி அசிங்கமா இருக்குன்னு சுகன்யா கத்தறா. ஏய்.. என்னை என்னடி பண்ண சொல்றே என் நிலைமை அப்படின்னு சொல்றான் கதிரேசன்.

    தப்பு கதிரேசா

    தப்பு கதிரேசா

    தப்பு கதிரேசா.. நீ செய்யற தப்பை நியாய படுத்தி பேசாதே.. அவ்ளோதான் நான் சொல்லுவேன்னு மாமியார் விஜயலட்சுமி சொல்றாங்க. பேசுவேன் அத்தே.. நான் பாட்டுக்கு பிசினெஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன். உங்க தம்பி மண்ணை அள்ளிப் போட்டான். இப்போ அவன் ராஜா மாதிரி சுத்திகிட்டு இருக்கான் நான் தம்புடி காசுக்கு வாக்கு இல்லாம நிக்கறேன்னு சொல்றான்.

    ஆமா பாழாய் போச்சு

    ஆமா பாழாய் போச்சு

    ஆமாம் நீ தம்புடி காசுக்கு வழி இல்லாம நிக்கறது பாழாய் போச்சு. தம்புடி காசுக்கு வழி இல்லாதவன்தான் இப்படி மொடக்க மொடக்க குடிச்சுட்டு வந்து நிக்கறானா என்று கேட்கிறாள் சுகன்யா. என்னாடி புருஷனோட கஷ்டத்தை புரிஞ்சுக்க முயற்சி பண்றியாடி நீன்னு கிட்டே வர்றான். ஆமா உங்களுக்கும் உங்க சகலைக்கும் மூட்டை மூட்டையா துக்கத்தை கொண்டு வந்து வீட்டில் கொட்றதுதான் வாழ்க்கைன்னு உங்க அம்மாவும், பெரியம்மாவும் சொல்லிக் கொடுத்துதான் வளர்த்து இருக்காங்கன்னு கத்தறா.

    ஏத்தி ஊத்தி

    ஏத்தி ஊத்தி

    எங்களை ஏன்டி வம்புக்கு இழுக்கறேன்னு மாமியார் கேட்க. வேற என்ன அத்தை பண்றது? நீங்கதானே அடிக்கடி அவரை ஏத்தி விடறீங்க...இன்னும் ஊத்தி மட்டும்தான் குடுக்கலை. கூடிய சீக்கிரம் அதுவும் நடந்துரும்னு நினைக்கிறேன்.. இதை எல்லாம் பார்க்க பார்க்க எனக்கு பத்திகிட்டு வருதுன்னு சொல்றா சுகன்யா. ஆக மொத்தம் கூடிய சீக்கிரம் சரண்யா மாதிரி சுகன்யாவும் புருஷனை ஒதுக்கி வைக்கப் போறா.

    English summary
    On Sunday, the 25th wedding anniversary of Krishnaveni and rajadurai chithapa will be celebrated. That's why Sun TV will air a special time between 9:30 pm and 10:30 pm. At this time, Vijayalakshmi's eldest daughter, Sukanya, is not making a drunken noise with her husband.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X