தமிழ் சீரியல்கள் நவம்பர் 24ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: துளசி,வெற்றியிடம் ஸ்ரீகாந்திற்கும் அவரது தாயார் ராஜலட்சுமிக்கு விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும், அதில் ஏதோ மர்மம் இருப்பது போல எனக்கு தெரிகிறது என்றுசொல்கிறாள். உடனே, வெற்றி உங்களுக்கு எது என்று படுகிற தோ, அதை செய்யுங்க, நான் உங்க கூட பக்கபலமாக இருப்பேன் என்று சொல்ல, இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று ஸ்ரீகாந்த் விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சொல்கின்றனர்.

அண்ணா: அண்ணா சீரியலில், சௌந்தரபாண்டி பாண்டியம்மா இறந்து விட்டதாக சொல்லி டிராமா போட வீட்டில் உள்ளவர்கள் அதை நம்ப மறுக்கின்றனர். அதன் பிறகு பாண்டியம்மா இறந்து விட்டதாக ரிப்போர்ட் உடன் வர அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். மேலும் பாண்டியம்மாவை யாரோ அடிச்சு தான் கொன்னு இருக்காங்க என்று சொன்னது சௌந்திர பாண்டி அழுது டிராமா ஒன்றை போடுகிறார். முத்துப்பாண்டி யாரோ அத்தையோட தலையில அடிச்சு தான் கொண்ணு இருக்காங்க என்று சொல்ல சனியன் ஆமா தலையில் அடிச்சு தான் கொன்னாங்க என சொல்ல முத்துப்பாண்டி உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க சௌந்தரபாண்டி சமாளிக்கிறார். அடுத்து வீரா மற்றும் மாறன் இருவரும் கோவிலுக்கு வருகை தந்திருக்க, திருடன் ஒரு பையை கொண்டு வந்து இவர்களிடம் தூக்கிப் போட்டுவிட்டு எஸ்கேப் ஆக சண்முகம் அந்த திருடனை துரத்தியபடி அங்கு வருகிறான்.

பாரிஜாதம்: இசையை வீட்டை விட்டு அனைவரும் துரத்த, அப்போது வரும், சுப்ரதா தேவி இசை இந்த வீட்டு பொண்ணு அவ எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டா, அவளை பற்றி எனக்கு நன்றாக தெரியும், அவ இந்த வீட்டில் தான் இருப்பா, அவளால் இந்த கல்யாணத்தில் எந்த பிரச்சனையும் வராது என்று சொல்கிறாள். அதன் பிறகு இசையுடன் சுப்ரதா வீட்டுக்கு வர, இசை ஸ்ரீஜாவிடம் உன்னை இந்த வீட்டை விட்டு வெளியே துரத்துவேன் என்று சவால் விடுகிறாள். அதன் பிறகு கல்யாண பத்திரிக்கை அடிக்க வேண்டும் என சிந்தாமணி சொல்கிறாள். ராகவ் கல்யாண பத்திரிக்கையில் ஸ்ரீஜா பேருக்கு பதிலாக இசையின் பெயரை அச்சிட சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











