Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சன் டிவி மகாபாரதம்: பாண்டவர்கள்– கௌரவர்களின் மோதல் தொடங்கியது…
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மகாபாரதம் தொடர் 25 வது எபிசோடுகளை எட்டியுள்ளது.
பாலகர்களாக இருந்த பாண்டவர்களும், கவுரவர்களும் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டனர். சிறுவர்களாக இருந்தபோதிருந்தே இருவர்களுக்குமிடையே ஏற்பட்டிருந்த போட்டி மனப்பான்மை அவர்கள் வளர வளர போட்டி, பொறாமையும் வளர்ந்து விடுகிறது.
பாண்டவர்கள் அறிமுகம்
மகாபாரதம் தொடரின் 25 வது எபிசோடில் பாண்டவர்கள், கவுரவர்கள் பெரியவர்களாவிட்டனர். நேற்றைய தினம் அறிமுகக் காட்சி ஒளிபரப்பானது.
துரியோதனன் - பீமன்
துரியோதனனும், பீமனும் ஆக்ரோஸமாக மோதிக்கொண்டனர். இதைக்கண்டு பயந்த பீஷ்மர் அவர்களின் சண்டையை நிறுத்துமாறு துரோனோச்சாரியரிடம் கூறவே அவர், அஸ்வத்தாமனிடம் கட்டளையிடுகிறார். குருவின் மீது ஆணையிட்டு இருவரின் சண்டையை நிறுத்துகிறார் அஸ்வத்தாமன்.
அர்ஜூனனின் வித்தை
பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் அர்ஜூனன் தனது வித்தையை காண்பிக்கிறான். அப்போது அந்த கூட்டத்தில் கர்ணனின் வருகிறான்.
மயங்கிய குந்தி
கவசகுண்டலம் அணிந்த அந்த இளைஞனை பார்க்கும் போது குந்தி தேவிக்கு தனது மகனின் நினைவு வருகிறது. உடனே மயக்க நிலைக்கு தள்ளப்படுகிறாள்.
போட்டியிட தயாரா?
வில் வித்தையில் அர்ஜூனன் மட்டும் சிறந்தவனல்ல. தன்னுடைய திறமையை நிரூபிக்க வாய்ப்பளிக்க கோருகிறான் கர்ணன். அதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக என்பதை அடுத்த வாரம் காணலாம்.
பிரம்மாண்ட தயாரிப்பு
அர்ஜுனனின் வில் வித்தை சாகசங்கள், பீமன், துரியோதனனுக்குமான சண்டைக் காட்சிகள், மற்றும் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளதாக இயக்குநர் சசிகுமார் கூறியுள்ளார்.
200 எபிசோடுகள்
இந்தியில் வந்த 'மகாபாரதம்' வெறும் 56 எபிசோட்தான். இதனால் அதிகமாக கதை சொல்லி இருக்க மாட்டார்கள். மகாபாரதத்தில் இருந்து சொல்லப்படாத புதிய கதைகளையும் சொல்லுகிறோம். இது 200 எபிசோடை தாண்டும், இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்கிறார் சசிகுமார்.
சன் டி.வியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் 'மகாபாரதம்' தொடரில் 'பூவிலங்கு' மோகன், அமித் பார்கவ், ஓ.ஏ.கே சுந்தர், இளவரசன், மனோகர், தேவிப்பிரியா, ஐஸ்வர்யா, பூஜா உட்பட பலர் நடிக்கின்றனர்.