Don't Miss!
- News என்னது 60 சதவீதமா?அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை.. ஆனால்.. கோவையில் விளாசிய கனிமொழி!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
9 வயது பொடியனுக்கு திருமணம், முதல் இரவு: சர்ச்சை சீரியலை நிறுத்திய டிவி சேனல்
Recommended Video
மும்பை: சர்ச்சைக்குரிய டிவி சீரியலை ஒளிபரப்புவதை சோனி நிறுவனம் திடீர் என்று நிறுத்தியுள்ளது.
சோனி தொலைக்காட்சி சேனலில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் பெஹ்ரிதார் பியா கி. கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பான இந்த சீரியல் சர்ச்சையில் சிக்கியது.
சீரியலின் கதையால் அதற்கு எதிராக பலர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் புகார் தெரிவித்தனர்.
திருமணம்
9 வயது சிறுவனுக்கும், 18 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்து அவர்களின் வாழ்க்கையை காட்டி வந்தனர். 9 வயது அஃபான் கான் கணவராகவும், தேஜஸ் பிரகாஷ் 18 வயது மனைவியாகவும் நடித்தனர்.
புகார்
ஒரு சிறுவன் இளம்பெண்ணை பின்தொடர்வது, திருமணம் செய்து முதல் இரவு அறைக்குள் செல்வது ஆகியவற்றை பார்த்த மக்கள் சீரியலுக்கு தடை விதிக்குமாறு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் புகார் தெரிவித்தனர்.
எதிர்ப்பு
புகார்கள் எழுந்ததை அடுத்து சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தை இரவு 8. 30 மணியில் இருந்து 10.30 மணிக்கு மாற்றினார்கள். அப்படியும் எதிர்ப்பு வலுத்தது.
நிறுத்தம்
எதிர்ப்பு வலுத்ததை அடுத்து சோனி சேனல் பெஹ்ரிதார் பியா கி சீரியலை 28ம் தேதி முதல் ஒளிபரப்பவில்லை. சீரியலை நிறுத்திவிட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.