twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக்பாஸ்க்கு கெட்டப்பெயரை வாங்கி தந்ததே அவர்தான்.. ஏன் இன்னும் வெளியே அனுப்பல? சினேகன் சரமாரி சாடல்!

    |

    Recommended Video

    இந்த SEASON-ல இவங்க நல்லா விளையாடல | Snehan Exclusive Interview | Bigg Boss Tamil

    சென்னை: பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக் குறித்து முதல் சீசன் போட்டியாளரான சினேகன் கருத்து தெரிவித்துள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றவர் கவிஞர் சினேகன். அந்த சீசனின் ரன்னர்அப்பும் இவர் தான்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றவர்கள் நேர்மையாக நடந்துகொண்டனர். கேமராவுக்காக யாரும் நடிக்கவில்லை. ஆனால் அதற்கு பிறகு தொடங்கிய சீசன்களில் போட்டியாளர்கள் நடிக்கின்றனர் என்ற பேச்சு எழுந்தது.

    சின்ன வயசுதான் சீரியல்ல அம்மாவாக நடிக்கிறேன்... நாயகி வசந்தி இன்டர்வியூசின்ன வயசுதான் சீரியல்ல அம்மாவாக நடிக்கிறேன்... நாயகி வசந்தி இன்டர்வியூ

    4 பேரிடம் காதல்

    4 பேரிடம் காதல்

    மேலும் கடந்த சீசன்களில் எல்லாம் பார்க்காத பல சம்பவங்களும் இந்த சீசனில் அரங்கேறியது. அதாவது கன்டென்ட்டுக்காக காதலிப்பது, காதலிப்பது போல் நடிப்பது, நான்கு பேரை காதலித்தால் பிரச்சனை வராது என்பது தான்.

    கவினின் சுயநலம்

    கவினின் சுயநலம்

    கடந்த சீசன்களிலும் காதல் இருந்தது. ஆனால் உண்மையாக இருந்தது. ஆனால் இந்த எபிசோடில் கவின், போட்டியில் பங்கேற்ற பெண்களை தனது சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொண்டார்.

    சினேகன் சாடல்

    சினேகன் சாடல்

    இதனை அவர் தனது வாயலேயே ஒப்புக்கொண்டார். இந்நிலையில் பிக்பாஸ் சீசனில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களை முன்னாள் போட்டியாளரான சினேகன் கடுமையாக சாடியுள்ளார்.

    ஏன் துணிவில்லை?

    ஏன் துணிவில்லை?

    தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சினேகன் பிக்பாஸையும் விளாசியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, இரண்டு பேரையும் அப்போதே வெளியே அனுப்பியிருந்தால் மற்றவர்களுக்கு பயம் வந்திருக்கும். இதனை மன்னிக்க மனமிருந்த பிக்பாஸ்க்கு சரவணனை மன்னிக்க ஏன் மனமில்லை, மதுமிதா விஷயத்தை காண்பிக்க ஏன் துணிவில்லை? என்றும் சினேகன் கேள்வி எழுப்பினார்.

    அப்போதே அனுப்பியிருக்கனும்

    அப்போதே அனுப்பியிருக்கனும்

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்த சீசனில் முதல் கெட்டப்பெயரை வாங்கிக் கொடுத்தவர் கவின். காதலிப்பது போன்று நடித்தால் ட்ரென்ட்டாகும் ஜாலியாக இருக்கும் என்று கவின் சொன்னபோதே கவினை பிக்பாஸ் வெளியே அனுப்பியிருக்க வேண்டும்.

    பேட்டரியை கழட்டிய பிறகும்

    பேட்டரியை கழட்டிய பிறகும்

    ஏற்கனவே பிக்பாஸ்தான் கவினை உள்ளே அனுப்பியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. பிக்பாஸ்க்கு முதல் முறையாக ஒரு குற்றச்சாட்டையும் கெட்டப்பெயரையும் வாங்கித்தந்த கவினை, பேட்டரியை கழட்டிய பிறகும் பிக்பாஸ் வெளியே அனுப்பாதது, பிக்பாஸ்தான் அவரை அனுப்பினாரோ என்ற சந்தேகத்தை அதிகரிக்கிறது. இவ்வாறு கவிஞர் சினேகன் கூறினார்.

    English summary
    Poet Snehan slams Biggboss for not sending out Kavin yet from Biggboss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X