Don't Miss!
- News அமவுண்டை பாதியாக குறைத்த மா.செ.க்கள்..பாதியில் பறந்த ஏஜெண்ட்கள்! என்ன இது இரட்டை இலைக்கு வந்த சோதனை?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பிக்பாஸ்க்கு கெட்டப்பெயரை வாங்கி தந்ததே அவர்தான்.. ஏன் இன்னும் வெளியே அனுப்பல? சினேகன் சரமாரி சாடல்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக் குறித்து முதல் சீசன் போட்டியாளரான சினேகன் கருத்து தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றவர் கவிஞர் சினேகன். அந்த சீசனின் ரன்னர்அப்பும் இவர் தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றவர்கள் நேர்மையாக நடந்துகொண்டனர். கேமராவுக்காக யாரும் நடிக்கவில்லை. ஆனால் அதற்கு பிறகு தொடங்கிய சீசன்களில் போட்டியாளர்கள் நடிக்கின்றனர் என்ற பேச்சு எழுந்தது.
சின்ன வயசுதான் சீரியல்ல அம்மாவாக நடிக்கிறேன்... நாயகி வசந்தி இன்டர்வியூ
4 பேரிடம் காதல்
மேலும் கடந்த சீசன்களில் எல்லாம் பார்க்காத பல சம்பவங்களும் இந்த சீசனில் அரங்கேறியது. அதாவது கன்டென்ட்டுக்காக காதலிப்பது, காதலிப்பது போல் நடிப்பது, நான்கு பேரை காதலித்தால் பிரச்சனை வராது என்பது தான்.
கவினின் சுயநலம்
கடந்த சீசன்களிலும் காதல் இருந்தது. ஆனால் உண்மையாக இருந்தது. ஆனால் இந்த எபிசோடில் கவின், போட்டியில் பங்கேற்ற பெண்களை தனது சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொண்டார்.
சினேகன் சாடல்
இதனை அவர் தனது வாயலேயே ஒப்புக்கொண்டார். இந்நிலையில் பிக்பாஸ் சீசனில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களை முன்னாள் போட்டியாளரான சினேகன் கடுமையாக சாடியுள்ளார்.
ஏன் துணிவில்லை?
தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சினேகன் பிக்பாஸையும் விளாசியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, இரண்டு பேரையும் அப்போதே வெளியே அனுப்பியிருந்தால் மற்றவர்களுக்கு பயம் வந்திருக்கும். இதனை மன்னிக்க மனமிருந்த பிக்பாஸ்க்கு சரவணனை மன்னிக்க ஏன் மனமில்லை, மதுமிதா விஷயத்தை காண்பிக்க ஏன் துணிவில்லை? என்றும் சினேகன் கேள்வி எழுப்பினார்.
அப்போதே அனுப்பியிருக்கனும்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்த சீசனில் முதல் கெட்டப்பெயரை வாங்கிக் கொடுத்தவர் கவின். காதலிப்பது போன்று நடித்தால் ட்ரென்ட்டாகும் ஜாலியாக இருக்கும் என்று கவின் சொன்னபோதே கவினை பிக்பாஸ் வெளியே அனுப்பியிருக்க வேண்டும்.
பேட்டரியை கழட்டிய பிறகும்
ஏற்கனவே பிக்பாஸ்தான் கவினை உள்ளே அனுப்பியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. பிக்பாஸ்க்கு முதல் முறையாக ஒரு குற்றச்சாட்டையும் கெட்டப்பெயரையும் வாங்கித்தந்த கவினை, பேட்டரியை கழட்டிய பிறகும் பிக்பாஸ் வெளியே அனுப்பாதது, பிக்பாஸ்தான் அவரை அனுப்பினாரோ என்ற சந்தேகத்தை அதிகரிக்கிறது. இவ்வாறு கவிஞர் சினேகன் கூறினார்.