Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் வேலையை காட்டிய பொன்னம்பலம்: விளாசும் பார்வையாளர்கள்
Recommended Video
சென்னை: கஸ்தூரி விஷயம் தற்போது தான் அடங்கியுள்ள நிலையில் பொன்னம்பலம் புதுப் பிரச்சனையை கிளப்பியுள்ளார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று துவங்கியுள்ளது. 100 நாட்களுக்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இருக்காது. அவர்கள் பிக் பாஸ் வீட்டில் செய்யும் காரியங்களை பார்க்கவே பார்வையாளர்கள் சரியான நேரத்தில் நிகழ்ச்சியை பார்த்துவிடுவார்கள்.
முதல் நாளே கலவரத்துடன் நிகழ்ச்சி துவங்கியுள்ளது.
ஜெய் ஸ்ரீ ராம்
சீனியரான பொன்னம்பலம் நானும் யூத் தான் என்று சொல்வது போன்று டைட்டாக டி-ஷர்ட், ஷார்ட்ஸ் அணிந்து பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். அதுவும் ஜெய் ஸ்ரீ ராம் என்று வேறு சொல்லியுள்ளார். எந்த தைரியத்தில் பொன்னம்பலம் அப்படி சொல்லிவிட்டு பிக் பாஸ் வீட்டில் நிலைத்து நிற்கலாம் என்று நினைக்கிறார் என்ற விவாதம் கிளம்பியுள்ளது.
பெண்
டேனி, மகத், யாஷிகா, ஆர்.ஜே. வைஷ்ணவி ஆகியோர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தபோது அடுத்து வருவது ஆணா, பெண்ணா என்று பார்க்கலாம் என பொன்னம்பலம் தெரிவிக்க டேனியோ ஆண் என்றார். யாஷிகாவோ ஆண் என்றால் என்னவென்று அப்பாவித்தனமாக கேட்டார்.
யாஷிகா
ஆண், பெண் என்றால் என்ன என பொன்னம்பலம் யாஷிகாவுக்கு விளக்கிவிட்டு இரண்டும் கெட்டான வந்துடுச்சுன்னா என்ன பண்ணுவீங்க என்று கேட்டுள்ளார். அவர் பேசி முடித்தவுடன் ஜனனி ஐயர் வந்ததை பார்த்து யாஷிகா பெண் என்று கண்டுபிடித்துவிட்டார். சபாஷ் யாஷிகா.
பிரச்சனை
18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நடிகை கஸ்தூரி திருநங்கைகளின் புகைப்படங்களுடன் ட்வீட்டி சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் இரண்டும் கெட்டான் பற்றி பேசிய பொன்னம்பலத்தை பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் விளாசியுள்ளனர்.
சிறை
ஜனனி ஐயர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக சிறையை பற்றி தான் கேட்கிறார். ஜனனி வந்ததும் மகத் அவரை கட்டிப்பிடிக்க பொன்னம்பலமோ கட்டிப்பிடி வைத்தியம் எல்லாம் நாங்கள் பண்ணுவோம் என்கிறார். அந்த கட்டிப்பிடி வைத்தியத்தை கற்றுக் கொடுத்த அப்பனே வீட்டிற்கு வெளியே இருந்து உங்களை கண்காணிக்கிறார் பொன்னம்பலம்.