Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இது தான் பொன்னம்பலம், உங்களுக்கும், யாஷிகாவுக்கும் உள்ள வித்தியாசம்
சென்னை: யாஷிகா ஏதோ நல்ல புள்ளையாக இருப்பதால் பொன்னம்பலம் செய்ததை பெரிதுபடுத்தவில்லை.
பிக் பாஸ் 2 வீட்டில் வார இறுதி நாட்கள் வந்துவிட்டால் பொன்னம்பலம் தமிழ் கலாச்சாரம் பற்றி பேசத் துவங்கிவிடுவார். மகத், யாஷிகா, ஷாரிக், ஐஸ்வர்யா நடந்து கொள்ளும் விதத்தை விமர்சிக்கிறார் பொன்னம்பலம்.
டாஸ்க் ஒன்றின்போது யாஷிகாவை தடுக்க அவர் மடியில் அமர்ந்து கொண்டார் பொன்னம்பலம்.
யாஷிகா
சித்தப்பா, சித்தப்பா என்று சொல்லிக் கொண்டு ஒரு சின்னப்புள்ள மடியில் அமர்ந்த பொன்னம்பலம் மீது யாஷிகாவுக்கு கோபம் வரவில்லை. ஆனால் சக போட்டியாளர்களும், பார்வையாளர்களும் கோபப்பட்டனர். யாஷிகா இடத்தில் வேறு பெண் இருந்திருந்தால் அன்று நடந்திருப்பதே வேறு. ஏதோ யாஷிகாவாக இருக்கப் போய் சித்தப்ஸ் என்று சும்மா இருந்துவிட்டார்.
பொன்னம்பலம்
டாஸ்கின் போது ஆயிரம் தான் இருந்தாலும் யாஷிகாவின் மீது பொன்னம்பலம் அமர்ந்தது மிகப் பெரிய தவறு என்று மும்தாஜ் பாலாஜி, சென்றாயன், ரித்விகா ஆகியோரிடம் நேற்று இரவு தெரிவித்தார். இதே வேறு யாராவது செய்திருந்தால் பொன்னம்பலம் இந்நேரம் அதை பெரிய விஷயமாக்கியிருப்பார் என்றார் மும்தாஜ். மும்தாஜ் கூறியது மிகச் சரியே.
பெரியவர்கள்
பிக் பாஸ் வீட்டில் பெரியவர்கள் யாராவது இருக்க வேண்டும் என்பதால் தான் மும்தாஜ் மற்றும் பொன்னம்பலத்தை பலமுறை நாமினேட் செய்தும் எலிமினேட் செய்யவில்லை என்றார் பாலாஜி. மும்தாஜோ, பொன்னம்பலமோ இருந்தால் தான் வீட்டில் கட்டுப்பாடு இருக்கும் என்று பாலாஜி ஐஸ் வைத்தார். அப்படி எல்லாம் கிடையாது என்று மும்தாஜ் கூறினார்.
பாவம்
வைஷ்ணவி எனக்கு நெருக்கம் இல்லை, இருந்தாலும் அவர் வெளியேறியபோது ஃபீல் ஆகிவிட்டது என்கிறார் மும்தாஜ். வைஷ்ணவி தனி அறையில் இருப்பது தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் போட்டியாளர்கள். போட்டியாளர்கள் தன்னை பற்றி புறம் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறார் வைஷ்ணவி.