Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பொன்னி வள வீர சரித்திரம் டிவி தொடர் நிறுத்தம்: நடிகர் சிவகுமார்
சென்னை: தந்தி டிவியில் ஒளிபரப்பாகும் சர்ச்சைக்குரிய தொடரான பொன்னி வள வீர சரித்திரம் நிறுத்தப்படுவதாக நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பொன்னி வள வீர சரித்திரம் தொடர் தந்தி டிவியில் வாரந்தோறும், சனி, ஞாயிற்று கிழமைகளில், மாலை, 5:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் சில மணித்துளிகள் மட்டுமே பின்னணி குரல் கொடுத்துள்ள நான் எந்த ஒரு இனத்தின் மனதையும் புண்படுத்தும் வகையில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது இந்த தொடரை பார்த்தவர்களுக்குப் புரியும்.
கொங்கு நாட்டு மக்கள்
எப்படியிருப்பினும், நான் பிறந்த கொங்கு மண்ணில் வாழும் சகோதார இனத்தவர்களுக்கு இந்த தொடர் சிறிது வருத்தத்தை அளித்திருப்பதாக உணர்கிறேன்.
டிவி தொடர் நிறுத்தம்
அந்த சகோதர்களின் உணர்வை மதிக்கின்ற வகையில், தந்தி தொலைக்காட்சியினரிடம் பேசி இத்தொடரினை இத்துடன் நிறுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளேன். பொன்னி வள வீர சரித்திரம் தொடரினை நிறுத்திவிடுவாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்று நடிகர் சிவகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கொடும்பாவி எரிப்பு
நடிகர் சிவகுமார், தன்னுடைய ஜாதியை விளம்பரப்படுத்தும் விதமாகவும், பிற சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கிலும் பேசி வருகிறார் எனக்கூறி, இரு தினங்களுக்கு முன் ஈரோட்டில் கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நலச்சங்கத்தினர், நடிகர் சிவகுமார் கொடும்பாவி எரித்தனர்.
அப்போது அவர்கள், "பொன்னி வள ஒரு வீர சரித்திரம்' என்ற தொடரில், நடிகர் சிவகுமார், தன்னுடைய ஜாதியை விளம்பரப்படுத்தும் விதமாகவும், பிற சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கிலும் பேசி வருகிறார். இதைக் கண்டித்து, ஈரோடு மற்றும் நாமக்கல் கலெக்டர்களிடம் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, நடிகர் சிவகுமாரின் கொடும்பாவியை எரித்தோம். என்று தெரிவித்தனர்.
அறிக்கை
போலீசாரிடம், இதற்கான அனுமதி கோரவில்லை; போலீசாரும், யாரையும் கைது செய்யவில்லை. மாறாக, கொடும்பாவி எரிப்புக்கு பின், அனைவரையும் கலைந்து போகுமாறு அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் தொடர் நிறுத்தப்படுவதாக நடிகர் சிவகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.