Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
2வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை டிவி
தமிழகத்தில் ஆங்கில செய்தி சேனல்களுக்கு நிகராக தமிழ் செய்தி சேனல்கள் வராதா என பலரும் ஏங்கிக் கிடந்த நிலையில் சன் செய்தி சேனல் வெளி வந்தது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இதை விட்டால் வேறு செய்திச் சேனல் இல்லை என்ற நிலை இருந்தது.
ஒரு சம்பவம் நடந்தால் அது தவறு என்று ஒரு சேனலும், சரி என மற்றொரு சேனலும் ஒளிபரப்பி வந்தது. இதனால் நடுநிலை செய்திகளுக்கு பஞ்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி சேனலாக துவங்கப்பட்டது. வழக்கம்போல் இந்த சேனலும் ஏதாவது ஒரு கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று பலரும் நினைத்தபோது, அந்த நினைப்பை மாற்றி நடுநிலையான செய்திகளை உடனுக்கு உடன் வெளியிட்டு வந்தது.
இதனால் தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. நடுநிலை பிறவாமல் தனி இடம் பிடித்த புதிய தலைமுறை தொலைக்காட்சி துவங்கி நேற்றோடு ஓராண்டு நிறைவடைந்தது. இன்று இரண்டாமாண்டு தொடங்கியுள்ளது.
இதையொட்டி பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இன்று ஒளிபரப்பப்படுகின்றன. ஒரு தகவல் எப்படிச் செய்தியாகிறது, செய்தியாளர்களின் அனுபவங்கள், ஓராண்டில் வந்த வரைகலைப் பதிவுகள், ஒவ்வொரு பிரிவிலும் என்னென்ன நடக்கிறது, செய்தி சேகரிக்கச் செல்லுமிடங்களில் நிகழ்ந்த குறும்பு நிகழ்வுகள் ஆகியவை ஒளிபரப்பாகின்றன.