Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
2வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை டிவி
தமிழகத்தில் ஆங்கில செய்தி சேனல்களுக்கு நிகராக தமிழ் செய்தி சேனல்கள் வராதா என பலரும் ஏங்கிக் கிடந்த நிலையில் சன் செய்தி சேனல் வெளி வந்தது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இதை விட்டால் வேறு செய்திச் சேனல் இல்லை என்ற நிலை இருந்தது.
ஒரு சம்பவம் நடந்தால் அது தவறு என்று ஒரு சேனலும், சரி என மற்றொரு சேனலும் ஒளிபரப்பி வந்தது. இதனால் நடுநிலை செய்திகளுக்கு பஞ்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி சேனலாக துவங்கப்பட்டது. வழக்கம்போல் இந்த சேனலும் ஏதாவது ஒரு கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று பலரும் நினைத்தபோது, அந்த நினைப்பை மாற்றி நடுநிலையான செய்திகளை உடனுக்கு உடன் வெளியிட்டு வந்தது.
இதனால் தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. நடுநிலை பிறவாமல் தனி இடம் பிடித்த புதிய தலைமுறை தொலைக்காட்சி துவங்கி நேற்றோடு ஓராண்டு நிறைவடைந்தது. இன்று இரண்டாமாண்டு தொடங்கியுள்ளது.
இதையொட்டி பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இன்று ஒளிபரப்பப்படுகின்றன. ஒரு தகவல் எப்படிச் செய்தியாகிறது, செய்தியாளர்களின் அனுபவங்கள், ஓராண்டில் வந்த வரைகலைப் பதிவுகள், ஒவ்வொரு பிரிவிலும் என்னென்ன நடக்கிறது, செய்தி சேகரிக்கச் செல்லுமிடங்களில் நிகழ்ந்த குறும்பு நிகழ்வுகள் ஆகியவை ஒளிபரப்பாகின்றன.