Don't Miss!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
காதலா? கடமையா? பரபரப்புக்கு பஞ்சமில்லாத ரிப்போர்ட்டர்ஸ்
சென்னை: பரபரப்பான சம்பவங்களுடன் காதலும் மோதலும் கலந்த ‘ரிப்போர்ட்டர்ஸ்' தொடர் புதுயுகம் தொலைக்காட்சியில் செப்டம்பர் 7ம் தேதி முதல் திங்கள் - வெள்ளி இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கொரியன் சீரியர்களை ஒளிபரப்பி வந்த புதுயுகம் டிவியில் இப்போது இந்தி சீரியல்களும் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகின்றன.
செய்தியாளர்கள் வாழ்வில் பரபரப்புக்கும் சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமே இருப்பதில்லை. நிருபர் தொழிலை லட்சியமாக ஏற்றுக்கொண்ட துணிச்சலான இளைஞர்களின் வாழ்க்கையில் நிகழும் முக்கிய திருப்பங்களை சொல்வதுதான் ‘ரிப்போர்ட்டர்ஸ்' தொடர்.
ரிப்போர்ட்டர்ஸ்
பிரபல பத்திரிகையில் நிருபராக பணிபுரியும் கபீரும் சேனலில் பணிபுரியும் ஆனந்தியும் ஒரு எக்ஸ்குளூசிவ் செய்தியை வெளியிடுவதற்காக போட்டி போடுகிறார்கள். முழுமையான ஆதாரம் இருந்தாலும் ஆனந்தியால் செய்தியை வரவழைக்க முடியாமல் போகிறது.
பறிபோகும் வேலை
அந்த செய்தியை வெளியிடும் கபீருக்கு நல்ல பெயர் கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த செய்தியே அவன் வேலை பறிபோவதற்கும் காரணமாகிறது. அதன்பிறகு ஆனந்தி வேலை செய்யும் சேனலில் முக்கிய பொறுப்புக்கு வருகிறான் கபீர்.
காதலும் கடமையும்
கபீருடன் சேர்ந்து பணிபுரிய ஆனந்தி மிகவும் விருப்பமுடன் இருந்தாலும், இருவருக்கும் பல்வேறு விஷயங்களில் கடுமையான மோதல் நடக்கிறது. அதேநேரம் சேனல் அதிபரின் மகளுக்கு கபீர் மீது காதல் வருகிறது. சாதிக்கத்துடிக்கும் கபீர் காதலில் விழுந்தானா? அநியாயம் செய்பவர்களை தட்டிக்கேட்க முடிந்ததா? என்பதை நோக்கி 'ரிப்போர்ட்டர்ஸ்' தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.
புதுயுகம் தொலைக்காட்சியில்
ரிப்போர்டர்ஸ் தொடரில் ராஜீவ் கண்டேல்வால், கிருத்திகா காம்ரா, மேகா சாட்டர்ஜி, புரு ஷிபர், ஆலம்கான், விக்ரம்ஜித் போன்ற பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். சமூக அக்கறையுடன் காதலும் மோதலும் நிறைந்த, ‘ரிப்போர்ட்டர்ஸ்' பரபரப்புத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதே தொடர் மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கும் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!