பிக் பிரதர் ரியாலிட்டி ஷோவில் டீனா உப்பலுக்கு அவமரியாதை

சேனல் 5 தொலைக்காட்சி நடத்தும் பிக் பிரதர் ரியாலிட்டி ஷோவில் பிரபலங்கள் பங்கேற்கின்றனர். அவர்களை ஒருவீட்டில் தங்கவைத்து அவர்களின் நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.
இந்த நிகழ்ச்சியின் சுவரஸ்யத்திற்காகவும் டிஆர்பிஐ அதிகரிக்கவும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கிளுகிளுப்பான விசயங்களை இதில் புகுத்துகின்றனர். அதேபோல் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை அவமரியாதையாக நடத்துவது அவர்களை அழவைப்பது போன்ற பல்வேறு நிகழ்வுகளை நடத்துகின்றனர். பிக்பிரதர் 13வது சீசனில் பங்கேற்ற டீனா உப்பல்க்கு அதுபோன்ற ஒரு அவமரியாதை நடந்துள்ளது.
ஏற்கனவே 2007ம் ஆண்டு இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஷில்பா ஷெட்டியை அவருடன் பங்கேற்ற ஜேட்கூடி இனவெறியை தூண்டும் விதமாக பேசி அவமானப்படுத்தினார் அதனால் ஷில்பாவிற்கு பார்வையாளர்களின் ஓட்டுக்கள் அதிகம் விழுந்தன நிகழ்ச்சியில் அவரும் வெற்றி பெற்றார்.
தற்போது மிஸ் இந்தியா - யுகே பட்டம் வென்ற டீனா உப்பல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவரை அதே வீட்டில் தங்கிய சக பங்கேற்பாளர் அவமரியாதை தரக்கூடிய வார்த்தையால் பேசியுள்ளார். இதனையடுத்து டீனா உப்பால் தன்னை அவமானப்படுத்தியவர் மீது பிக்பிரதர் நிர்வாகத்தில் புகார் அளித்தார். அதன் எதிரொலியாக அவமரியாதை செய்த நபரை பிக் பிரதர் தயாரிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். இதுவரை 1108 புகார்கள் பிக்பிரதர் நிகழ்ச்சியில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











