Don't Miss!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாணி ராணி சீரியல் முடிந்தபோது நிம்மதியாக இருந்தது: ராதிகா சரத்குமார்
Recommended Video
சென்னை: வாணி ராணி சீரியல் முடிந்த போது நிம்மதியாக இருந்ததாக ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக ஒளிபரப்பான வாணி ராணி தொலைக்காட்சி சீரியல் கடந்த வாரம் முடிந்தது. இதையடுத்து ராதிகா சரத்குமார் நடிப்பில் சந்திரகுமாரி சீரியல் துவங்கியுள்ளது.
இந்நிலையில் வாணி ராணி, சந்திரகுமாரி பற்றி ராதிகா கூறியதாவது,
வாணி ராணி
நான் இந்த சீரியலில் 6 ஆண்டுகள் நடித்துள்ளேன். தற்போது நான் எங்காவது வெளியே சென்றால் என்னை பார்க்கும் மக்கள் கேட்கும் முதல் கேள்வி, வாணி ராணி சகோதரிகளை மீண்டும் எப்பொழுது பார்ப்போம் என்பது தான். அது தான் அந்த சீரியலின் வெற்றி. என் கெரியரிலேயே வாணி ராணி கதாபாத்திரங்கள் தான் மிகவும் சவாலானவை.
ராதிகா
படங்களில் இரட்டை வேடத்தில் நடித்தால் கதாபாத்திரங்களை புரிந்து கொண்டு நடிக்க நேரம் இருக்கும். ஆனால் சீரியலில் நேரமே இருக்காது. அனைத்து காட்சிகளையும் நினைவில் கொண்டு வசனங்களை பேச வேண்டும். நான் அந்த சீரியலை தயாரித்ததுடன், கிரியேட்டிவ் பணிகளையும் பார்த்ததால் மிகவும் சவாலாக இருந்தது. நான் பல விஷயங்களை கவனிக்க வேண்டி இருந்தது.
நிம்மதி
நான் வாணி ராணி சீரியலில் நடித்துக் கொண்டே படங்கள், சந்திரகுமாரி என்று பிசியாக இருந்தேன். இரவும், பகலும் வேலை பார்த்தேன். அதனால் அந்த சீரியல் முடிந்தபோது நிம்மதியாக இருந்தது. 7 ஜென்மம் உண்டு என்பார்கள். அந்த கான்செப்டில் தான் சந்திரகுமாரி எடுக்கப்படுகிறது. இந்த சீரியலில் நான் 7 கதாபாத்திரங்களில் வருகிறேன்.
சந்திரகுமாரி
ஒரு சீரியலை துவங்குவது தான் பெரிய வேலை ஆகும். தற்போது சந்திரகுமாரி சீரியல் துவங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த சீரியல் ரசிகர்கள் அனைவருக்கும் புது அனுப
வமாக இருக்கும். நான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் படங்களில் வேலை செய்தது இல்லை. தற்போது சந்திரகுமாரி சீரியலில் தான் சேர்ந்து வேலை செய்கிறோம். சந்திரகுமாரி சீரியலில் குறிப்பிட்ட பகுதியை நீங்கள் தான் இயக்க வேண்டும் என்று நான் அவரிடம் கூறியபோது உடனே ஒப்புக் கொண்டார். அவருக்கு டிவி பற்றி தெரியும். அது ஒரு பிளஸ் ஆகும் என்று ராதிகா தெரிவித்துள்ளார்.
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!
-
சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு