twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘சித்தி’யிடம் பிரகாஷ்ராஜ் கேட்ட கேள்வி!

    By Mayura Akilan
    |

    Radhika and Prakashraj
    தமிழ்நாட்டில் அம்மாவின் தங்கையை எப்படி அழைப்பார்கள்?

    பெரியம்மா, அக்கா, சித்தி

    இது என்ன என்று பார்க்கிறீர்களா? நடிகர் பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராதிகாவிடம் பிரகாஷ் ராஜ் கேட்ட கேள்வி இது.

    சூரியனுக்கே டார்ச்சா என்பது போல சிரித்த ராதிகா. எப்படி சொல்லலாம்? சித்தீ.... இப்படி சொல்லவா? என்று கேட்டுவிட்டு சித்தி சீரியல் பற்றி கதை சொன்னார்.

    சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்து முதல்முதலாக சீரியல் தயாரிக்கும் போது சித்தி தொடரினை தயாரித்து வெற்றி பெற்றதாக கூறினார்.

    சித்தி தொடரின் இறுதி எபிசோடினை பார்க்கும் போது திருப்பதியில் லட்டு தயாரிக்கும் பணியைக் கூட நிறுத்திவைத்து விட்டு சீரியலைப் பார்க்க பணியாளர்கள் போனதாக பெருமையுடன் கூறினார்.

    நிகழ்ச்சியின் இடையே தன்னுடைய நடித்த நடிகைகள், ஸ்ரீதேவி, ராதா, போன்ற நடிகைகளுடன் இணைந்து நடித்தைப் பகிர்ந்து கொண்டார்.

    முதல்மரியாதை படத்தில் நடிக்க அழைப்பு வந்த போது முதன் முறையாக நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்க வந்த வாய்ப்பினை கூறிய ராதிகா முன்பே ஒத்துக்கொண்ட பணி என்பதால் கமலுடன் நடிக்க நேரிட்டதாகவும் கூறிய ராதிகா, பாரதிராஜாவின் அழைப்பை ஏற்று முதல்மரியாதையில் ராதாவிற்கு குரல் மட்டுமே கொடுத்ததாக கூறினார்.

    நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் ஜெயிக்கும் பணத்தை ஏழை குழந்தைகளின் கல்விக்காகவும், சின்னத்திரைக் கலைஞர்களுக்காகவும் கொடுக்கப் போவதாக கூறினார் ராதிகா. இந்த நிகழ்ச்சி திங்கட்கிழமையும் தொடர்கிறது. ராதிகா ஒரு கோடி வெல்வாரா? என்று பார்க்கலாம்.

    English summary
    Radhika Sarathkumar is Participating Vijay TV Game Show Neengalum Vellalam Oru Kodi. Actor Prakash Raj hosts the program.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X