சின்னத்திரை தயாரிப்பளர் சங்கத்தலைவராக ராதிகா மீண்டும் தேர்வு: செயலாளரானர் குஷ்பு
சென்னை: சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தலைவராக ராதிகா சரத்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுச்செயலாளராக நடிகை குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் ராதிகா சரத்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் 2014- 2016ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ராதிகா சரத்குமார்
சங்கத்தின் தலைவராக ராதிகா சரத்குமாரே மீண்டும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டடார்.

குஷ்பு
செயலாளராக குஷ்பு சுந்தரும், பொருளாளராக டி.ஆர்.பாலேஷ்வரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

குட்டி பத்மினி
நடிகை குட்டி பத்மினி, சுஜாதா விஜயகுமார் ஆகியோர் துணை தலைவர்களாகவும், ஈ.ராம்தாஸ், டி.வி.சங்கர் ஆகியோர் இணை செயலாளர்களாகவும்,

செயற்குழு உறுப்பினர்கள்
பி.ராதா, சுஜாதா கோபால், வினயா கிருஷ்ணன், ரவி, கே.ஜி.ஜெயவேல், ஆர்.சதீஷ், பி.சீனிவாசன், எஸ்.சுந்தர், பி.சீனிவாசலு, ஏ.எஸ்.வெங்கடாசலம், ஜி. ஜெயகுமார் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஏவிஎம் சரவணன்
ஏவிஎம்.சரவணன், டி.ஜி.தியாராஜன், அழகன் தமிழ்மணி ஆகியோர் சங்கத்தின் காப்பாளராக நியமிக்கப்பட்டனர்.


Click it and Unblock the Notifications











