Don't Miss!
- News ஆட்டத்தை கலைத்த பாஜக.. பெரிய கூட்டணி இல்லாமல் களம் இறங்கும் அதிமுக.. வேட்பாளர்கள் பட்டியல் எப்போது?
- Finance 20000 ரூபாய்க்கு கீழ் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் - பட்ஜெட் ஷாப்பிங்
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
ஜப்பானில் கெத்து காட்டி போலீசில் சிக்கிய ராஜா ராணி 'செம்பா'
Recommended Video
சென்னை: ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் செம்பாவாக நடிக்கும் ஆல்யா மானசா ஜப்பான் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
ராஜா ராணி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த தொடரில் அவர் அப்பாவி பெண் செம்பாவாக நடித்து வருகிறார்.
செம்பாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
செம்பா
ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் அநியாயத்திற்கு அப்பாவியாக நடித்துள்ளார் ஆல்யா மானசா. இப்படி இருக்காதம்மா, பதிலுக்கு திருப்பிக் கொடு என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு அப்பாவியாக நடிக்கிறார்.
தேர்வு
ஆல்யாவின் முகத்தில் அப்பாவித்தனம் தெரிந்ததால் அவரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்குமாறு அழைத்தார்களாம். என் முகத்தில் அப்பாவித்தனம் தெரிகிறதா என்று ஆல்யாவுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சாம்.
ஆல்யா
ராஜா ராணியில் அவ்வளவு அப்பாவியாக இருக்கும் செம்பா நிஜத்தில் தலைக்கனம் இல்லாமல் படபடவென பேசும் மாடர்ன் பெண். மனதில் பட்டதை பேசுகிறார்.
போலீஸ்
நான் ஜப்பான் மொழி கற்றுள்ளேன். ஜப்பான் சென்றபோது போலீசாரிடம் மாட்டிக் கொண்டேன். அங்கு சைக்கிளில் டபுள்ஸ் போகக் கூடாது. நான் கெத்தாக சீன தோழியுடன் டபுள்ஸ் போனேன். அப்படி போனபோது போலீசார் வழிமறுத்து பாஸ்போர்ட்டை கேட்டார்கள். பின்னர் பாவப்பட்டு எச்சரித்துவிட்டனர் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் ஆல்யா மானசா.