Don't Miss!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கலைஞர் டிவியில் ராஜேஷ்குமாரின் ‘மூன்றாவது கண்’
பிரபல எழுத்தாளர்கள் சின்னத்திரைக்கும், சினிமாவிற்கும் வருவது புதிய விசயமில்லை. ஏற்கனவே, சுபா, தேவிபாலா போன்றவர்களின் கதைகள் சின்னத்திரை, சினிமா என இரண்டிலுமே வெற்றி பெற்றிருக்கின்றன. தற்போது க்ரைம் கதை மன்னர் என்று வாசகர்களால் அழைக்கப்படும் ராஜேஷ்குமாரின் கதைகள் கலைஞர் தொலைக்காட்சியில் மர்மத் தொடராக ஒளிபரப்பாக உள்ளன.
“மூன்றாவது கண்" என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரை திரைப்படம் போல கலைஞர் தொலைக்காட்சிக்காக உருவாக்கியுள்ளனர் கிரீன் சில்லீஸ் தயாரிப்பு நிறுவனத்தினர். இந்த நிறுவனத்தின் தலைமை படைப்பாளர் பொறுப்பினை வெங்கட் ஏற்றுள்ளார். இந்த தொடரை பாரதிராஜாவிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த சி.எஸ் பிரேம்நாத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'உயர்திரு 420' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதற்கான திரைக்கதை வசனத்தை ஜி. ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். கார்த்திக்கேய மூர்த்தி இசையமைக்க பாடல்களை விவேகா, ஷேசசாமி ஆகியோர் எழுதியுள்ளனர்.
இதன் முதல் மர்மக்கதை “கோகிலா கொலை வழக்கு" இந்த திரில்லர் தொடரில் தேவ் ஆனந்த், நீலிமா கராத்தே கார்த்திக், பஞ்சட்டி, ராம்கி, சுருளி மனோகர், மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ஆகியோர் நடித்துள்ளனர். வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் இந்த தொடர் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.