Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிக்பாஸ் வீட்டிற்குள் இன்றும் இரண்டு விருந்தாளிகள்! கவின பார்த்து 'அந்த' வார்த்தைய சொல்லிட்டாங்க!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் இன்றும் விருந்தாளிகளாக கடந்த சீசனில் பங்கேற்ற இரண்டு போட்டியாளர்களை அழைத்து வந்துள்ளார் பிக்பாஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 94வது நாளை எட்டியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்று தெரிந்துவிடும்.
பெரும்பாலான போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனர். இதனால் நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்துவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களை அழைத்து ஒப்பேத்துகிறார் பிக்பாஸ்.
மகத், யாஷிகா
அதன்படி நேற்று கடந்த சீசனில் பங்கேற்ற மகத்தும், யாஷிகா ஆனந்தும் பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தாளிகளாக வந்தனர். டாஸ்க்கில் கவனம் செலுத்துமாறு ஹவுஸ்மேட்ஸ்களுக்கு அட்வைஸ் செய்தனர்.
ரித்திவிகா, ஜனனி ஐயர்
இந்நிலையில் இன்று கடந்த சீசனின் டைட்டில் வின்னரான ரித்திவிகாவும் ஜனனி ஐயரும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். வந்த வேகத்தில் நான் இங்கிருந்து போவதற்குள் எனக்கு ஏதாவது கைவினை பொருள் செய்து கொடுங்கள் என முகெனிடம் கேட்கிறார் ஜனனி ஐயர்.
கவினுக்கு கலாய்
இதனை தொடர்ந்து லிவிங் ஏரியாவில் அமர்ந்து எல்லோரும் வித்தியாசமாக இருக்கிறீர்கள் என்ற ஜனனி ஐயர், ஒவ்வொருவரை பற்றியும் கூறுகிறார். தர்ஷன் வந்த நாள் முதல் இப்போதுவரை அப்படியே இருக்கிறார் என்று கூறும் ஜனனி ஐயர், கவினை கலாய்த்திருக்கிறார்.
நீங்கதான் வில்லன்
கவின் ஏற்கனவே கூறிய, அதிகமா அடி வாங்குனது நான்தான் அதனால கப்பு எனக்கு தான் என்ற டயலாக்கை கூறும் ஜனனி ஐயர் உங்கள் கதையில் நீங்கள்தான் ஹீரோ, நீங்கள் தான் வில்லன் என்று வாரியுள்ளார்.