நான் என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை! நெகிழ்ச்சியடைந்த ரித்விகாவின் தந்தை!
நான் என்ன புண்ணியம் செய்தேன் எனத் தெரியவில்லை என்று ரித்விகாவின் தந்தை கூறினார்
சென்னை: ரித்விகாவை பெற்றதற்கு என்ன புண்ணியம் செய்தேன் எனத் தெரியவில்லை அவரின் தந்தை கூறினார்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டிலை கைப்பற்றினார் ரித்விகா. அந்த மகிழ்ச்சியோடு மேடை ஏறிய அவரின் பெற்றோர் அக மகிழ்ந்தனர்.

ரித்விகாவின் அப்பா பேசும்போது இந்த வெற்றிக்கு காரணம் கமல்ஹாசன் தான் பல விஷயங்களில் அவர் உதவி செய்தார் என்று கூறினார். இந்த வாய்ப்பை வழங்கிய எங்கள் கமல்ஹாசனுக்கு நன்றி என்றார்.
மேலும், உலகநாயகனுடம் மேடையில் உரையாடும் வாய்ப்பை வழங்கிய ரித்விகாவை பெற்றதற்கு என்ன புண்ணியம் செய்தனோ தேரியவில்லை என நெகிழ்ந்தார்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், அவர் பேசும்போது எல்லோரையும் குறிப்பிட்டுவிட்டு " எங்க கமல்" என்றார். அதுதான் நான் விரும்புவது என அரசியல் பேச்சுக்கு ரூட்டை மாற்றிவிட்டார்.
மிகப்பெரிய ஒத்திகை நடந்துகொண்டிருப்பதாகவும், அங்கு இருப்பவர்கள் மீது இருக்கும் அன்புபோல, தமிழ்நாட்டின் மீதும், தமிழக மக்களின் மீதும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











