ரோஜா முருகனுக்கு விரதம் இருந்து... காவடி தூக்கி....அரோகரா...!
சென்னை: சன் டிவியில் ரோஜா சீரியலில் கணவனின் உயிரை காப்பாத்தி குடுத்த முருகனுக்கு விரதம் இருந்து காவடி தூக்கிகிட்டு கால் நடையா கோயிலுக்கு வர்றதா வேண்டிக்கறா.
வீட்டில் மயில் தோகை வச்சு அலங்கரிச்ச காவடியை பூஜையறையில் வச்சு அத்தை கல்பனா பூஜை செய்து ரோஜாவின் தோளில் வைக்கறாங்க.
கோயிலுக்கு போகும் வழியில் ரோஜாவை ஆள் வச்சு கொலை செய்ய அனுவும், ஸாக்ஷியும் திட்டம் போட்டு வச்சு இருக்காங்க.

இப்போது சீரியல்களில்
இப்போது நிறைய சீரியல்களில் தமிழ் கடவுள்; முருகனை பெண்கள் கும்பிடுவது விரதம் இருப்பது போல காட்சிகள் வைப்பது... அதிகமாகி இருக்கிறது. பார்க்கவும் சந்தோஷமாக இருக்கிறது. முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரான்னு கோஷம் போடுவது காதுக்கு இனிமையாக இருக்கிறது.

பக்தியில் ரோஜா
பக்தி பரவசத்தில் ரோஜாக் காவடியைத்
தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.அதே உடையில் ரோஜாவின் போட்டோவை அனுப்பு...இந்த ரவுடி பசங்களுக்கு வேணுமாம்னு சாக்ஷி அனுவுக்கு போன் பண்றா. அனு...அத்தை ரோஜா பார்க்க அம்மன் மாதிரி இருக்கா...ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கறேன்னு சொல்லி எடுத்து அவளுக்கு அனுப்பறா.

எப்படி கொலை
கோயிலுக்கு கூட்டத்தோடு நடை பயணமா போகும் ரோஜாவை எப்படி அர்ஜுனை மீறி கொலை செய்ய முடியும்? ரோஜா சீரியல் கதை விறு விறுன்னு போயிகிட்டு இருந்தாலும்...இப்போது கொஞ்சம் போரடிக்கற மாதிரி இருக்கு.

அல்வா சாப்பிடற
இப்போது எல்லாம் சீரியலில் பெண்கள் கொலை செய்வது போல திட்டம் போடறது என்னவோ அல்வா சாப்பிடுவது போல இருப்பது மாதிரி காமிக்கறாங்க.. இதை எல்லாம் கொஞ்சமாவது மாத்த நினைங்கப்பா....


Click it and Unblock the Notifications











