twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Roja Serial: மல்லிப் பூவை காக்கா தூக்கிட்டு போயிருச்சு சார்!

    |

    சென்னை:சன் டிவியின் ரோஜா சீரியலில் ரோஜாவும், அர்ஜுனும் கோயிலுக்கு போறாங்க. கோயில் வாசலில் ஒரு பூக்கார அம்மாவைப் பார்த்துட்டு, தலையில் வாடாமல் இருந்த மல்லிப் பூவை எடுத்து ரோஜா தூக்கி எறிஞ்சுடறா.

    இதை அர்ஜுன் பார்த்துட்டு, ஓரக்கண்ணால் பூக்கார அம்மாவையும் பார்க்கறான்.ரோஜா எதோ திட்டம் போட்டுட்டேன்னு மனசுக்குள்ள சொல்லிக்கறான்.வண்டியை ஸ்டார்ட் செய்துட்டு,ரோஜா போலாமான்னு கேட்கறான்.

    ம்ம்..போலாம் சார்னு இவ சொல்ல, சரி உட்காருன்னு சொல்றான் அர்ஜுன். ம்கும்னு கணைக்கறா ரோஜா. என்ன ரோஜா புரியலையேன்னு கேட்கறான். உங்களுக்கு ஒண்ணும் புரியாது சார்...சரியான ரசனை கெட்ட ஜென்மன்னு சொல்றா.

    Vanakkam thamizha: அதானே பார்த்தேன்.. இன்னும் கின்னஸ் மேட்டரைக் காணாமேன்னு! Vanakkam thamizha: அதானே பார்த்தேன்.. இன்னும் கின்னஸ் மேட்டரைக் காணாமேன்னு!

    காட்டேஜ் ஹனிமூன்

    காட்டேஜ் ஹனிமூன்

    ரோஜாவையும், அர்ஜுனையும் கல்பனா பிளான் பண்ணி சென்னையில் இருக்கும் காட்டேஜ் ஒன்றுக்கு ஹனிமூன் அனுப்பி வைக்கறாங்க. இந்த ஹனிமூன் நடப்பதற்குள் அவர்கள் ரெண்டு பேரையும் கொன்னுடணும்னு அணுவும், சாக்க்ஷியும் திட்டமிட்டும் ஒண்ணும் செய்ய முடியவில்லை.இருந்தாலும், அர்ஜுன் சொல்றான், நமக்கு இப்போ ஹனிமூன் வேணாம் ரோஜா, உனக்கு நீ யாரு, உன் அமமா,அப்பா யாருன்னு தெஞ்சுக்காம என் கூட சந்தோஷமா இருக்க முடியாது.

    நாம வாழ ஆரம்பிக்கலாம்

    நாம வாழ ஆரம்பிக்கலாம்

    அவங்க யாருன்னு சீக்கிரம் கண்டு பிடிச்சுடுவேன். பையா கணேஷ் கொலை வழக்கில், அணுவுக்கும், சாக்ஷிக்கும் தண்டனை வாங்கிக் குடுத்துட்டு, நம்ம வாழ்க்கையை சந்தோஷமா ஆரம்பிக்கலாம். அதனால ,நீ நெர்வஸா இருக்காதா. எப்போதும் போல நாம ஜாலியா இருந்துட்டு இங்கிருந்து கிளப்பிருவோம்னு அர்ஜுன் சொல்றான். சார் நீங்க மனுஷன் இல்லை சார், மனுஷனுக்கும் மேலன்னு நெகிழ்ந்து பேசறா.

    மல்லிப் பூ எங்கே ரோஜா?

    மல்லிப் பூ எங்கே ரோஜா?

    உன் தலையில வச்சிருந்த மல்லி பூ என்னாச்சு ரோஜான்னு கேட்கறான்.அது காக்கா தூக்கிகிட்டு போயிருச்சு சார்னு சொல்றா. எந்த காக்கா தூக்கிட்டு போச்சுன்னு இவன் கேட்க,சார் எதுக்கு சார் இந்த ஆராய்ச்சி, இப்போ என்ன அந்த காக்காவை தேடிப் புடிக்க போறீங்களான்னு சிணுங்கலா கேட்கறா.

    கண்டு பிடிச்சுட்டேன்

    கண்டு பிடிச்சுட்டேன்

    அந்த காக்கா ரோஜான்னு கண்டு பிடிச்சுட்டேன். அதனாலதான், ரோஜாவை பிடிக்கணும்னு துடிக்கறேன்னு சொல்றான் அர்ஜுன். போங்க சார், ஒரு பொண்டாட்டி புருஷன் கிட்டே இருந்து என்ன சார் ஆசைப்படுவா...ஒரு முழம் மல்லிப் பூ புருஷன் கையால வாங்கித் தரணும்..அதுதானே ஆசை. அதை கேட்காமலே செய்ய கொடாதான்னு கேட்க, அர்ஜுன் உடனே பூ வாங்கி ரோஜாவின் தலையில் வச்சு விடறான்.

    English summary
    Sun TV's roja serial rose and Arjun go to temple Seeing a florist at the temple gate, the flower of the jasmine , which fell on her head, could not be thrown.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X