Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
Roja Serial: மல்லிப் பூவை காக்கா தூக்கிட்டு போயிருச்சு சார்!
சென்னை:சன் டிவியின் ரோஜா சீரியலில் ரோஜாவும், அர்ஜுனும் கோயிலுக்கு போறாங்க. கோயில் வாசலில் ஒரு பூக்கார அம்மாவைப் பார்த்துட்டு, தலையில் வாடாமல் இருந்த மல்லிப் பூவை எடுத்து ரோஜா தூக்கி எறிஞ்சுடறா.
இதை அர்ஜுன் பார்த்துட்டு, ஓரக்கண்ணால் பூக்கார அம்மாவையும் பார்க்கறான்.ரோஜா எதோ திட்டம் போட்டுட்டேன்னு மனசுக்குள்ள சொல்லிக்கறான்.வண்டியை ஸ்டார்ட் செய்துட்டு,ரோஜா போலாமான்னு கேட்கறான்.
ம்ம்..போலாம் சார்னு இவ சொல்ல, சரி உட்காருன்னு சொல்றான் அர்ஜுன். ம்கும்னு கணைக்கறா ரோஜா. என்ன ரோஜா புரியலையேன்னு கேட்கறான். உங்களுக்கு ஒண்ணும் புரியாது சார்...சரியான ரசனை கெட்ட ஜென்மன்னு சொல்றா.
Vanakkam thamizha: அதானே பார்த்தேன்.. இன்னும் கின்னஸ் மேட்டரைக் காணாமேன்னு!
காட்டேஜ் ஹனிமூன்
ரோஜாவையும், அர்ஜுனையும் கல்பனா பிளான் பண்ணி சென்னையில் இருக்கும் காட்டேஜ் ஒன்றுக்கு ஹனிமூன் அனுப்பி வைக்கறாங்க. இந்த ஹனிமூன் நடப்பதற்குள் அவர்கள் ரெண்டு பேரையும் கொன்னுடணும்னு அணுவும், சாக்க்ஷியும் திட்டமிட்டும் ஒண்ணும் செய்ய முடியவில்லை.இருந்தாலும், அர்ஜுன் சொல்றான், நமக்கு இப்போ ஹனிமூன் வேணாம் ரோஜா, உனக்கு நீ யாரு, உன் அமமா,அப்பா யாருன்னு தெஞ்சுக்காம என் கூட சந்தோஷமா இருக்க முடியாது.
நாம வாழ ஆரம்பிக்கலாம்
அவங்க யாருன்னு சீக்கிரம் கண்டு பிடிச்சுடுவேன். பையா கணேஷ் கொலை வழக்கில், அணுவுக்கும், சாக்ஷிக்கும் தண்டனை வாங்கிக் குடுத்துட்டு, நம்ம வாழ்க்கையை சந்தோஷமா ஆரம்பிக்கலாம். அதனால ,நீ நெர்வஸா இருக்காதா. எப்போதும் போல நாம ஜாலியா இருந்துட்டு இங்கிருந்து கிளப்பிருவோம்னு அர்ஜுன் சொல்றான். சார் நீங்க மனுஷன் இல்லை சார், மனுஷனுக்கும் மேலன்னு நெகிழ்ந்து பேசறா.
மல்லிப் பூ எங்கே ரோஜா?
உன் தலையில வச்சிருந்த மல்லி பூ என்னாச்சு ரோஜான்னு கேட்கறான்.அது காக்கா தூக்கிகிட்டு போயிருச்சு சார்னு சொல்றா. எந்த காக்கா தூக்கிட்டு போச்சுன்னு இவன் கேட்க,சார் எதுக்கு சார் இந்த ஆராய்ச்சி, இப்போ என்ன அந்த காக்காவை தேடிப் புடிக்க போறீங்களான்னு சிணுங்கலா கேட்கறா.
கண்டு பிடிச்சுட்டேன்
அந்த காக்கா ரோஜான்னு கண்டு பிடிச்சுட்டேன். அதனாலதான், ரோஜாவை பிடிக்கணும்னு துடிக்கறேன்னு சொல்றான் அர்ஜுன். போங்க சார், ஒரு பொண்டாட்டி புருஷன் கிட்டே இருந்து என்ன சார் ஆசைப்படுவா...ஒரு முழம் மல்லிப் பூ புருஷன் கையால வாங்கித் தரணும்..அதுதானே ஆசை. அதை கேட்காமலே செய்ய கொடாதான்னு கேட்க, அர்ஜுன் உடனே பூ வாங்கி ரோஜாவின் தலையில் வச்சு விடறான்.