Don't Miss!
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
செம்பா சுத்தமா மூட் அவுட்... ரசிகர்களும் மூட் அவுட்டில்....!
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் செம்பா சுத்தமா மூட் அவுட்டில் இருக்கறதுனால, அவள் முகத்தில் சந்தோஷம் இல்லை. சீரியல் ரசிகர்களுக்கும் செம்பாவை இப்படிப் பார்க்க பிடிக்கலை.
செம்பா கிராமத்து குலசாமி கோயிலுக்கு வர கூடாதுன்னு ராஜசேகர் செம்பாவின் மாமனார் சொல்லியும், அவளை கோயிலுக்கு அழைச்சுட்டு வந்துடறான் புருஷன் கார்த்திக்.
செம்பா பிறந்த ஊர் அது.. செம்பா அப்பாவின் நண்பர்தான் செம்பாவின் தற்போதைய மாமனார்.
ராஜசேகர் அப்பாவை
செம்பாவின் அப்பாவை ராஜசேகர்தான் கொலை செய்தார் என்று, கிராம வாசி ஒருவர் செம்பாவிடம் சொல்லிவிட , அதிர்ந்து போகிறாள் செம்பா. பெரிய ஐயா இப்[படி செய்திருப்பாரா...என்னால நம்ப முடியலையேன்னு அழறா.
கோயிலுக்கு எதுக்காக
எதுக்காக நம்மை பெரிய ஐயா நம்மை கிராமத்து குலசாமி திருவிழாவுக்கு வரக்கூடாதுன்னு சொல்லி இருப்பார். ஒரு வேளை இந்த உண்மை தனக்கு தெரிஞ்சுரும்னு நினைச்சுத்தான் பெரிய ஐயா அப்படி சொன்னாரான்னு செம்பாவுக்குள் குழப்பம். வீட்டில் படுக்கை அறையை விட்டு வெளியில் வராமல் இருக்கா.
மாத்திரை ஐயாவுக்கு
பெரிய ஐயா இந்த மாத்திரை எல்லாம் விடாம போட்டுக்கணும்... கரெக்ட்டா இதுல எழுதி வச்சு இருக்கேன்..அதுப்படி மாத்திரை எடுத்துக்குங்க பெரிய ஐயான்னு முகத்தை கூட பார்க்காம சொல்லிட்டு போறா... செம்பா உன்கூட கொஞ்சம் பேசணும் செம்பான்னு இவர் சொல்ல, வேணாம் பெரிய ஐயா...எதையும் காலம் கடந்து கேட்கற நிலைமையில நான் இல்லைன்னு சொல்லிட்டு போறா.
சுவாமிஜி கார்த்திக்
கார்த்திக் சிவாஜியிடம் போயி எதுக்கு செம்பாவை வர வேணாம்னு சொன்னீங்க சுவாமிஜின்னு கேட்கறான். நான் உங்க குடும்பத்துக்கு அஸ்திவாரமே செம்பாதான்னும்...அவளை அழைச்சுக்கிட்டு வரணும்னும்தான் சொன்னேன். அப்புறம் உங்க அப்பா என்கிட்டே சில உண்மைகளை சொன்னதும்தான் நான் அப்படி சொன்னதா ஒத்துக்கிட்டேன்னு சுவாமிஜி சொல்ல கார்த்திக்கும் விக்கித்து நிற்கிறான்.