Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இதுவும் இனவெறி போன்றதுதான்.. மதுமிதாவின் உருவத்தையும் முக அமைப்பையும் சாண்டி கிண்டல் செய்தது சரியா?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் சாண்டி மதுமிதாவின் உயரத்தையும் முக அமைப்பையும் கிண்டல் செய்ததை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 30 நாட்களை தாண்டிவிட்டது. இதுவரை மதுமிதா இப்படி கோபப்பட்டு பார்த்ததில்லை.
நேற்று மிகவும் கோபப்பட்ட மதுமிதா, சாண்டியை விளாசிவிட்டார். இத்தனை நாட்களாக எல்லா சூழலையும் மிகவும் கூலாக ஹேண்டில் செய்து வந்த மதுமிதா நேற்று கோபப்பட்டது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட ப்ரியங்கா, கோஹ்லி எவ்வளவு வாங்குகிறார்கள் தெரியுமா?
மக்களின் அபிமானம்
மதுமிதாவுக்கு எதிராக வனிதா தலைமையில் கேங்க ஃபார்ம் ஆகி சண்டை போட்ட போதுகூட அந்த சூழ்நிலையை மிகவும் அமைதியாக கையாண்டார் மதுமிதா. இதனால் மக்களின் அபிமானத்தை பெற்றார்.
சாண்டி, சாக்ஷி டாஸ்க்
அப்படிப்பபட்ட மதுமிதா நேற்று பொங்கியதன் காரணம், அவரது முகத்தில் பேஸ்ட்டை தடவி விட்டு ஹெவியாக டான்ஸ் ஆட வேண்டும் என சாண்டி, கவின், சாக்ஷி ஆகியோர் கொடுத்த டாஸ்க்தான்.
சிரித்த சாண்டி
தனக்கு உடம்பு சரியில்லை, சீக்கிரம் அனுப்புங்கள் பாத்ரூம் செல்ல வேண்டும் என மதுமிதா கூறியும் ஹெவியா ஆடிவிட்டு போ என்றார் சாண்டி. முடியாமல் தவித்த மதுமிதாவை பார்த்து சிரித்தார் சாண்டி.
இது வேற நடந்திருக்கு
இதனால் கடும் கோபமடைந்த மதுமிதா பொறுமையை இழந்து சாண்டி மீது பாய்ந்தார். மதுமிதாவின் கோபத்திற்கு நேற்றைய டாஸ்க் மட்டும் காரணம் அல்ல. கடந்த 30 நாட்களாக மதுமிதாவின் உயரத்தையும் முக அமைப்பையும் கிண்டல் செய்துள்ளனர் கவினும் சாண்டியும்.
எல்லை மீறிய கிண்டல்
இதனை ஒரு கட்டம் வரை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளார் மதுமிதா. இந்த கிண்டலும் கேலியும் எல்லை மீறவே நேற்று பொங்கிவிட்டார் மதுமிதா.
ஏற்றுக்கொள்ளவே முடியாது
கேலிக்கும் கிண்டலுக்கும் ஒரு அளவிருக்கிறது அல்லவா? ஒருவரின் முக அமைப்பு, உயரம் இவை அனைத்தும் இயற்கையாக அமைவது. அவற்றை வைத்து கிண்டல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாததுதான்.
பாலில் போட்ட உப்பு
நகைச்சுவை உணர்வு மிக்கவர், அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறார் என கமல்ஹாசன் அண்மையில் சாண்டியை புகழ்ந்தார். இந்நிலையில் ஒருவரின் உடலமைப்பை வைத்து பாட்டு பாடி சாண்டி கிண்டல் செய்தது சரியா? இத்தனை நாட்கள் சாண்டி பெற்ற பெயரெல்லாம் நேற்று ஒரே நாளில் பாலில் போட்ட உப்பாகி விட்டது.
இதுவும் இனவெறி போன்றதுதான்
நடிகர் சூர்யாவின் உயரத்தை டிவி தொகுப்பாளினிகள் இரண்டு பேர் கிண்டல் செய்ததால் கொதித்து போயினர் அவரின் ரசிகர்கள். இதேபோல் தமிழக பாஜக தலைவர் தமிழிசையையும் அவரது தலைமுடியை வைத்து சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கின்றனர். என்றுதான் மாறுமோ இந்த அவலம்? இதுவும் இனவெறி போன்ற ஒரு வகையான வெறிதான்!