சாத்தான் வேதம் ஓதுதோ? கவினால் காயம்.. சேரனிடம் ஆறுதல் தேடும் சாண்டி.. குத்திக்காட்டும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாண்டி, கவினால் பட்ட காயத்துக்கு சேரனிடம் ஆறுதல் தேடி வருவதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினுக்கும் சாண்டிக்கும் இடையில் தற்போது கோல்டு வார் நடைபெற்று வருகிறது. காதலியான லாஸ்லியாவை பேசவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறார் கவின்.
சாண்டி பேசுவதை கூட கேட்கும் அளவுக்கு கவினுக்கு பொறுமை இல்லை. லாஸ்லியா சொல்வதும் செய்வதும் தான் சரி என்றிருக்கிறார் கவின்.

அட்வைஸ் கேட்டதில்லை
இதனால் மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகியிருக்கிறார் சாண்டி. சேரனிடம் மற்றவர்கள் அட்வைஸ் கேட்ட நிலையில் சாண்டியும் கவினும் சேரனிடம் இதுவரை அட்வைஸ் கேட்டதில்லை.

வருத்தப்பட்ட சாண்டி
ஆனால் நேற்று முதல் முறையாக கவின் லாஸ்லியா குறித்து சேரனிடம் பேசினார் சாண்டி. கவின் எதையும் கேட்கும் நிலையில் இல்லை என்றும் தான் பேசுவதை தவறு என்றும் கூறுகிறார் என சேரனிடம் கூறி வருத்தப்பட்டார் சாண்டி.

கவின் மதிப்பதேயில்லை
பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்துள்ள நிலையில் சாண்டியும் கவினும் சேரனை எதிரியை போலவே பார்த்து வந்தனர். குறிப்பாக கவின், சேரனை ஒரு பைசாவுக்கு கூட மதிப்பதில்லை, அவரை ஏதோ பகையாளியை போலவே பார்த்து வருகிறார்.

சாத்தான் வேதம் ஓதுதோ
ஆரம்பத்தில் கவின் சேரனிடம் பேசிய போது, சாத்தான் வேதம் ஓதுதோ என்று சேரனை நக்கலடித்தார் சாண்டி. இந்த விஷயத்தை கமல், ஸ்டேஜில் புட்டு வைத்தார்.

ரசிகர்கள் வரவேற்பு
தற்போது கவினால் காயப்பட்ட நிலையில் சேரனிடம் தனது மனக்குமுறல்களை கொட்டி ஆறுதல் தேடுகிறார் சாண்டி. இதனை பார்த்த ரசிகர்கள் இப்போதாவது புத்தி வந்ததே என சாண்டியின் நகர்வை வரவேற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











