Don't Miss!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஓடிப் போய் கட்டிப் பிடிக்க நினைக்கறா ஜனனி... கட்டுப்படுத்திகிட்டு நிக்கறான் சந்தோஷ்...!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் நல்ல கதை.. தேவை இல்லாம இழுத்து ஜவ்வாக்கறது கடுப்பாகுது. பின்னணி இசை காதை துளைக்குது. கலர்ஸ் தமிழ் டிவியில் சமூக அக்கறை கொண்ட சீரியல்கள் நிறைய கொடுக்கறாங்க.
தூக்கலான இசையில் பேசறது காதில் விழாமல் இரிடேட்டிங்கா இருக்கு. கதைக் குழு, இயக்குநர் இதை கொஞ்சம் கவனிச்சா நல்லாருக்கும். விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் இந்த மூன்று சேனல்களும் சீரியல்கள் எடுப்பதில் ஒரே மாதிரி வேகம்தான்.
ஒரு எபிசோடுக்கு குறைந்தது 4 காட்சிகள் அதிகம் போனால் 6 காட்சிகள் இருக்கலாம். அவ்வளவுதான் சீரியல்களின் வேகம். டயலாக் யோசிச்சு யோசிச்சுதான் பேசுவாங்க. இதெல்லாம் திருத்திகிட்டாத்தான் சீரியலில் யார் கூட போட்டி போடணும்னு நினைக்கறாங்களோ அந்த சேனல்களோட போட்டி போட முடியும்.
நடிப்பின் அழகு வடிவுக்கரசி.. ராதிகா கண்ணில் படாமல் போனது ஏனோ!
வந்தாச்சு ஜனனி
ஒரு வழியா திருமணம் சீரியலில் ஜனனியை, ஓரகத்தி மாயா வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடறாங்க. சந்தோஷுக்கு வேற யாரையாவது கல்யாணம் செய்து வச்சுட்டா அவ ஜனனி மாதிரி இருக்கமாட்ட்டாளேன்னு பயந்துகிட்டுத்தான் ஜனனியை அழைச்சுக்கிட்டு வந்துட்டாங்க.
மாமியார் படம்
வீட்டுக்குள் நுழைந்தவுடன் மாமியார் படத்தை துடைத்து விளக்கேற்றி சாமி கும்பிடறா. எல்லாத்துக்கு தனது ஸ்பெஷல் காபியை போட்டுத் தர்றா. அவளது கண்கள் சந்தோஷை தேடுது. அவன் வீட்டில் இல்லை.
போனில் தங்கை
சந்தோஷின் தங்கச்சி போன் செய்து அண்ணி வந்துட்டாங்கன்னு சொல்ல, காரை எடுத்துக்கிட்டு உடனடியா வர்றான். அந்த நேரம் ஜனனி மாடியில் இருக்கா. அவனை மாடிக்கு போக விடாமல் கலாட்டா செய்த தங்கச்சி, சரி போனா போகட்டும்னு சொல்லி சிரிச்சுட்டு விட்டாரா.
கட்டிப் பிடிக்க
சந்தோஷை பார்த்ததும் ஓடி வந்து கட்டிப் பிடிச்சுக்கற மாதிரி கற்பனையில் திளைக்கறா ஜனனி. இருவரும் கற்பனையில் இறுக கட்டி நிக்கறாங்க. நிஜத்தில் பேச மறந்து, தள்ளி தள்ளி நிக்கறாங்க. மனதில் கோடி ஆசைகள்.. ஆனா, கல்யாண கால ஆரம்ப கட்டங்கள் அவர்களை பேச, எதுவும் செய்ய விடாமல் தடுக்குது.
ரிகர்ஷல்தாங்க
என்னை அப்பா வீட்டுல விட்டது எனக்கு, இனி என் வாழ்ககை அவ்ளோதான்னு நினைச்சேன். ஆனாலும், இதுதானே நிரந்தரம், அதுக்கு இது ரிகார்ஷலா இருக்கட்டும்னு நினைச்சுக்கிட்டேன். எப்படியும் நாம் டிவோர்ஸ் வாங்கிட்டா நான் போய்த்தான் ஆகணும். ஆனா, நான் இல்லாம மாமா, உங்க தங்கச்சி, நவீன் எல்லாரும் தவிச்சு போயிடுவாங்க.. அதை நினைச்சா கஷ்டமா இருக்குன்னு சொல்றா.
மறந்துட்டீங்க
இந்த லிஸ்ட்ல என்னை மறந்துட்டீங்க ஜனனி.சுத்தி சுத்தி டிவோர்ஸ் பாயிண்டுக்கே வர்றீங்க... ஆரம்பத்துல தெரியாம தப்பு செய்துட்டேன். அந்த தப்பை இனி செய்யறதா இல்லன்னு சொல்றான். அந்த சமயத்துல படுக்கறேன்னு சொல்லிட்டு கீழ படுக்கையை விரிக்கறா.
எது தடுக்குது
இருவரும் ஒன்று சேர மனம் துடிக்குது. சந்தோஷ் காதலியைத்தான் அதிகம் விரும்புவான்னு ஜனனி நினைத்து ஒதுங்க, ஜனனியை எப்படி விட்டுட்டு நம்மால இருக்க முடியும்னு யோசிச்சுகிட்டே ரெண்டு பேரும் படுத்துடறாங்க..
ஒரு தரம் நடந்தாலும் கல்யாணம் கல்யாணம்தாண்டா.. வீணா வாழ்க்கையை கெடுத்துக்காதீங்க...