ஸ்ரீ சங்கரா டிவியில் "சரஸ்வதி கடாக்ஷம்"
பள்ளிகளில் பொதுத்தேர்வு நேரம் நெருங்கிவிட்டது. மாணவர்கள் சிறந்த முறையில் அச்சமின்றி தேர்வெழுத ஸ்ரீ சங்கரா டிவியில் சரஸ்வதி கடாட்சம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
பிப்ரவரி 3ம் தேதி முதல் 28ம் தேதி வரை காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை சரஸ்வதி கடாட்சம் ஒளிபரப்பாகிறது.

மாணவர்களுக்கு மன அழுத்தம்
போட்டிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

தேர்வு பயம் போக்க
மாணவர்களின் மனஅழுத்தமே அவர்களுக்கு தேர்வு பற்றிய அச்சத்தை தருகிறது. இதனைப் போக்கும் வகையில் ஸ்ரீ சங்கர தொலைக்காட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.

சரஸ்வதியின் அருள்
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியின் அருள் பெரும் வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் வந்து பூஜைகளை நடத்தினர் ஸ்ரீ சங்கரா டிவி குழுவினர்.

சரஸ்வதி கடாக்ஷம்
ஸ்ரீ சங்கரா தொலைகாட்சியின் அடுத்த கட்ட முயற்சியாக குழந்தைகளுக்காக "சரஸ்வதி கடாக்ஷம்" என்னும் புதிய நிகழ்ச்சி
பிப்ரவரி மாதம் 3ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை காலை 8 .00 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











