Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்த அப்பா பெண்ணை கொஞ்சம் பாருங்களேன்!
சில விளம்பரங்களைப் பார்த்தால் உடனே சேனல் மாற்றத் தோன்றும்... சில விளம்பரங்கள் வைத்த கண் வைக்காமல் பார்க்க வைக்கும். நம்ம அண்ணாச்சிக்கடை சரவணா ஸ்டோர் விளம்பரமும் கவித்துவமாக எடுக்கப்பட்டுள்ளது.
சரத்குமாரும் அவரது மகள் வரலட்சுமியும் நடித்துள்ள இந்த விளம்பரம் பெண்ணைப் பெற்ற அப்பாக்களுக்கு பிடித்தமானதாக மாறியுள்ளது.
எடுத்துக்கோ எடுத்துக்கோ
சரவணா ஸ்டோர் ஜவுளிக்கடை விளம்பரம் என்றாலே கதாநாயகிகளின் குத்தாட்டம்தான் மெயின் ஐயிட்டமாக இருக்கும். அதுவும் அக்கா சிநேகா வந்து எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சிக்கடையில் எடுத்துக்கோ என்று கூவி கூவி விற்பார்.
சரத் - வரலட்சுமி
ஆனால் இந்த விளம்பரமோ... பெண் குழந்தையைப் பெற்ற தகப்பனின் பொறுப்பை உணர்த்துகிறது. இதில் அப்பாவாக சரத்குமாரும் மகளாக அவரது சொந்த மகள் வரலட்சுமி நடித்துள்ளார்.
என்னா ஒரு கம்பீரம்
இதுநாள் வரை பனியன், வேஷ்டி என விளம்பரப்படங்களில் நடித்துள்ள சரத்குமார் இதில் ஒரு கம்பீரமான அப்பாவாக நடித்துள்ளார்.
பட்டுப்புடவையில் மகள்
பாவாடை சட்டையில்... தாவணியில் பார்த்து சந்தோசப்பட்ட மகளை திடீரென மணக்கோலத்தில் அதுவும் பட்டுப்புடவையில் பார்த்து பரவசப்படும் தந்தையாய் சரத் குமார் அசத்தியுள்ளார்.
விளம்பர வாரிசுகள்
விஜய் - ஷோபா நகை விளம்பரம் போல சரத் - வரலட்சுமியின் அண்ணாச்சி கடை விளம்பரம் ரசிகர்களை கவர்ந்துள்ளதாம். ஆனால் இதை வைத்து பட்டுப்புடவை எடுக்கப் போவார்களா என்றால் அது எனக்குத் தெரியாது!.