Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
Eramana Rojave Serial: ஒரே காட்சியில் சந்திரமுகியும்...சந்தோஷ் சுப்பிரமணியமும்! இதெப்படி இருக்கு?
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் மலருக்கும் வெற்றிக்கும் எதிர்பாராமல் கல்யாணம் நடந்துருது. வெற்றி முதலில் மெக்கானிக் செட்டில் வேலை செய்கிறான். தம்பதி இருவருக்குள்ளும் எந்தவித நெருக்கமும் இல்லை.
காலப்போக்கில் இருவருக்குள்ளும் ஒருவர் மேல் ஓருவருக்கு காதல் வந்துருது ஆனாலும் இருவரும் சொல்லிக் கொள்ளவில்லை.இந்த நிலையில் மலரின் தங்கை அகிலாவுக்கும்,வெற்றியின் தம்பி புகழுக்கும் கூட எதிர்பாராமல் திருமணம் அதே மாதிரி நடந்துவிடுகிறது.
அகிலாவும், புகழும் இன்னும் எலியும் பூனையும் ஆகத்தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் மலருக்கு அரசு பள்ளியில் டீச்சர் வேலை கிடைச்சுருது. கொண்டு போய் விடுவது, அழைத்து வருவதுன்னு அவளுக்கு உதவி செய்யறான் வெற்றி.
தும்மல் மலர்
மலர் வெற்றியுடன் பேசிக்கொண்டு இருக்கும் போதே மலர் ஹச் என்று ஒரு தும்மல் போடுகிறாள். அடுத்தும் இதே போல தும்மல் போட, என்ன மலர் இப்படி தும்மல் போடறீங்கன்னு வெற்றி கேட்கிறான். நேத்து காலையில பனி யில் வண்டியில ஸ்கூலுக்கு பொனேன்ல அதுதாங்க ஒத்துக்கலைன்னு சொல்றா. என்ன மலர் நானுமன்தான் உங்க கூட வந்தேன். இவ்ளோ வீக்காவா இருக்கீங்க.எனக்கு தும்மல் வருதா பாருங்கன்னு சொன்ன அடுத்த நிமிடம் அவனும் ஹச்னு தும்மறான்.
உங்களுக்கும் தும்மல்
பார்த்தீங்களா...நீங்க மட்டும் என்னவாம். உங்களுக்கும்தான் தும்மல் வந்துட்டுது. மலர் சொல்ல இருவரும் மாறி மாறி தும்முகிறார்கள். இரு மலர் இதுக்கு சரியான மருந்து எடுத்துட்டு வரேன்னு வெற்றி போயிட்டு,ஆவி பிடிக்க வெந்நீர், அதில் மருந்துடன் வருகிறான். மலர் முதலில் நீங்க ஆவி பிடிங்கன்னு வெற்றி சொல்ல, எனக்கு ஆவி பிடிச்சா மூச்சு திணரும்ங்க..என்னால முடியாது என்று மலர் சிணுங்க. சும்மா பிடிங்க. இதுக்கெல்லாமா துணைக்க வர முடியும்னு வெற்றி சொல்றான்.
ஐடியா சூப்பர்
நல்ல சூப்பரான ஐடியாவா இருக்குங்க.வாங்க உங்களுக்கும் தானே தும்மல் வந்துச்சு.ரெண்டு பேரும் ஒண்ணா ஆவி பிடிக்கலாம்னு மலர் சொல்ல, வெற்றியும் துணியின் உள்ளே புகுந்துக்கறான்.அப்போது இருவர் மண்டையும் முட்டிக்கொள்ள, எங்க இப்படி முட்டிகிட்டா இன்னொரு தடவை முட்டிக்கணும். இல்லேன்னா கொம்பு முளைச்சிடும்னு மலர் சொல்ல,சரி வாங்க இன்னொரு தடவை முட்டிக்கலாம்னு சொல்றான் வெற்றி.நல்லாவே முட்டலைங்க..இன்னொரு முறை முட்டிக்கலாம்னு சொல்லி இருவரும் முட்டிக்கறாங்க.
சந்திரமுகி சந்தோஷ் சுப்ரமண்யம்
சந்திரமுகி, சந்தோஷ் சுப்ரமணியம் என்று இரண்டு படங்களின் காட்சிகளை வச்சு இருக்கீங்க. ஒரு கர்ட்டஸிக்கு கூட சந்திரமுகி படத்தில் வர்ற மாதிரி, சந்தோஷ் சுப்ரமண்யம் படத்துல வர்ற மாதிரின்னு சொல்ல மாட்டீங்களா? இதென்ன யாரு என்ன கேட்டுவிடப் போறாங்கன்னு இத்தனை அலட்சியம்?1