Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிக் பாஸுக்காக ஐஸ்வர்யா செய்த 'அடேங்கப்பா' தியாகம்
Recommended Video
சென்னை: பிக் பாஸுக்காக ஐஸ்வர்யா பெரிய தியாகம் செய்துவிட்டாராம்.
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஐஸ்வர்யாவை நாமினேஷனுக்கு அனுப்புவது பிக் பாஸுக்கு பிடிக்காது. கடும் விமர்சனம் எழுந்ததை அடுத்து இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் போன் டாஸ்கின் போது ஐஸ்வர்யா செய்த தவறை பிக் பாஸ் கண்டிக்கவில்லை.
டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ள பூத்தில் இருக்கும் போன் காலை எடுத்துப் பேசியதால் ஐஸ்வர்யா அடுத்த வாரத்திற்கு நாமினேட் ஆனார். அதில் இருந்து தப்பிக்க சென்றாயனின் தலைமுடியை சிவப்பு நிறத்தில் கலர் செய்ய வேண்டும் என்றார் பிக் பாஸ். அதற்கு ஐஸ்வர்யாவோ சென்றாயனிடம் பொய் சொல்லி தலைக்கு டை அடிக்க வைத்தார்.
ஐஸ்வர்யா
சென்றாயன் தனது தலைமுடியை கலர் செய்தால் அவர் காப்பாற்றப்படுவார் என்று பொய் சொன்னார் ஐஸ்வர்யா. உடனே பிக் பாஸ் மீண்டும் போன் செய்து நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று கூறியதற்கு அதெல்லாம் இல்லை நன்றாக புரிந்து தான் செய்கிறேன் என்று பிராடுத்தனம் செய்வதை ஒப்புக் கொண்டார். இது தப்பு இல்லையா என்று பிக் பாஸ் கேட்டதற்கு, இல்லை, சென்றாயனை காப்பாற்ற வாய்ப்பு வரும்போது நான் செய்வேன் என்று கூறி சமாளித்துவிட்டார் ஐஸ்வர்யா.
ஜனனி
ஐஸ்வர்யா தன்னை காப்பாற்றிக் கொள்ள பொய் சொல்லியது மும்தாஜ், ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகாவுக்கு தெரிந்துவிட்டது. சென்றாயன் அப்பாவி என்பதால் அவரை எளிதில் ஏமாற்றி காரியம் சாதித்துக் கொண்டார் ஐஸ்வர்யா. கேட்டால் இது தனது யுக்தி என்று தம்பட்டம் வேறு. இந்த கள்ளத்தனத்திற்கு யாஷிகாவும் உடந்தை.
மகிழ்ச்சி
ஐஸ்வர்யாவிடம் போனில் பேசிய பிக் பாஸ் இந்த நிகழ்ச்சிக்காக நீங்கள் எதை தியாகம் செய்தீர்கள் என்று கேட்டார். உடனே ஐஸ்வர்யா தனது சந்தோஷத்தை தியாகம் செய்துவிட்டதாக கூறினார். கொழந்தை, சுயபுத்தி இல்லை என்று மற்றவர்கள் கூறுவது அவருக்கு கஷ்டமாக உள்ளதாம். நீங்கள் பேயாட்டம் ஆடும்போது மற்றவர்களுக்கு கஷ்டமாக உள்ளதை அவர்கள் சொல்லிக் கொண்டா இருக்கிறார்கள்?