Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சரவணன் – மீனாட்சி செந்தில் மேல் சீரியல் நடிகை சுகன்யா புகார்…
சென்னை: சரவணன் - மீனாட்சி தொடரில் நடித்த சுகன்யாவும், செந்திலும் காதலிப்பதாக கூறப்பட்டது.
சுகன்யா பாதி சீரியிலில் இருந்து வெளியேறி சொந்த ஊரான சிங்கப்பூருக்கே சென்று விட்டார்.
செந்தில் சினிமாவில் பிசியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். இப்போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
செந்தில் மேல் காதல்:
காதல் முறிந்தது பற்றி சுகன்யா ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது, "சரவணன் மீனாட்சியில் நடிச்சபோது செந்திலுக்கும் எனக்கும் ஹாய் சொல்லிக்கிற நட்புதான் இருந்திச்சு.
ஏற்காட்டில் சின்ன விபத்து.. சின்ன லவ்:
ஏற்காட்டுல ஷூட்டிங் நடந்தப்போ எனக்கு ஒரு சின்ன விபத்து நடந்துச்சு. அப்போ செந்தில் பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டார். அப்போ அவர் மேல சின்ன லவ் வந்துச்சு. முதல்ல அவர்தான் காதலை சொன்னார்.
ஒத்துக்கொண்ட பெற்றோர்:
அப்புறம் அப்பா அம்மா ஒப்புதலோட லவ் பண்ண ஆரம்பிச்சோம். எனக்கு சில சினிமா வாய்ப்புகள் வந்தபோ சினிமால நடிக்க கூடாதுன்னு கண்டிஷன் போட்டார். தனக்கு நிறைய கேர்ள் பிரண்ட் இருப்பதாக காட்டிக்கிட்டார்.
செம டார்ச்சர்:
திருமணத்துக்கு முன்னாடியே இப்படி நடந்துக்கிறவர் பின்னாடி எப்படியெல்லாம் நடந்துக்குவாரோன்னு பயந்து விலக ஆரம்பிச்சேன். அப்புறம் தேடி தேடி வந்து டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சார். அதற்கு பிறகுதான் அவர்கிட்டேருந்து முழுசா விலகிட்டேன்" என்கிறார் சுகன்யா.
கருத்து வேறுபாடுகள்:
இதுபற்றி செந்தில் கூறியிருப்பதாவது, "இரண்டு பேரும் காதலிச்சதும், கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணினதும் உண்மைதான். எல்லாமே அவுங்க அப்பா, அம்மா சம்மதத்தோடதான் நடந்தது. இடையில கருத்து வேறுபாடுகள் வந்து விலகிட்டோம்.
இமேஜை உடைக்க வழி:
அவருக்கு நான் கிடைக்கலியேங்ற கோபத்துல என்னென்னவோ பேசுறார். என் சினிமா இமேஜை உடைச்சு காட்டுறேன்னு மிரட்டுறாங்க. அவுங்க என்ன வேணாலும் பண்ணிட்டு போகட்டும் என்னோட கவனம் எல்லாம் சினிமாலதான்" என்கிறார் செந்தில்.