Don't Miss!
- Finance சென்செக்ஸ்-ஐ பதம்பார்த்த ஈரான் - இஸ்ரேல் விவகாரம்.. தேர்தல் நாளில் இப்படியா நடக்கனும்..!!
- News அதிமுக எங்கள் பக்கம் வரும்.. கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. வாக்களித்த பிறகு ஓபிஎஸ் பரபர பேட்டி
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தடைகளைப் பற்றி கவலையில்லை – மகாலட்சுமி
சின்னத்திரைக்கு வந்து சிறிது காலத்திலேயே தனக்கென்று ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் மகாலட்சுமி. இப்போது செல்லமே, இருமலர்கள், உதிரிப்பூக்கள் என தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏகப்பட்ட தொடர்களை கைவசம் வைத்துக் கொண்டு, படு பிஸியாக இருக்கும் மகாலட்சுமி, தனது சின்னத்திரை பயணம் பற்றி கூறுவதைக் கேட்போம்.
என்னுடைய சின்னத்திரை பயணம் சன் மியூசிக்கில் காலை நேரத்தில் வாழ்த்தலாம் வாங்க நிகழ்ச்சியில் ஆரம்பித்தது இப்போது சீரியல்களில் தொடர்கிறது. நடிக்கணும் என்ற எண்ணமே கிடையாது. நிகழ்ச்சி தொகுப்போ, சீரியலோ இரண்டுமே தானாகவேதான் அமைந்தன.
அம்மா சுபி. அப்பா சங்கர் அவர் சினிமாவில் கொரியோகிராபி பண்ணிக்கிட்டு இருக்கார். தம்பி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறான். அம்மா எக்ஸ்போர்ட் பிஸினஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அவுங்களுக்கு திடீர்ன்னு உடம்பு சரியில்லாம போனதால நான்தான் பிசினஸைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போ என் பெரியம்மா மகள் நீபா மூலமாகத்தான் எனக்கு சீரியல் நடிக்க வாய்ப்பு வந்தது.
என்னோட முதல் தொடரே ராதிகா மேடம்கூட பண்ணுகின்ற வாய்ப்பு கிடைச்சது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நடிக்க வருவதற்கு முன்பே அவுங்களோட ரசிகை நான். எனக்கு அவுங்களை ரொம்ப பிடிக்கும். அவுங்களோட பழகும்போது அவுங்க கேரக்டர் ரொம்ப பிடிச்சது. அப்படி பிடித்தவர்களோட சேர்ந்து நடித்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது.
சீரியலில் எனக்கு நெகடிவ் ரோல்தான் அதிகமாக கிடைக்கிறது. சாதரணமாகவே எனக்கு நெகட்டீவ் ரோல் ரொம்பப் பிடிக்கும். பாஸிட்டிவ் ரோல் பண்ணுவதற்கு நிறைய பேர் வருவாங்க. ஆனால் ஒரு சிலர்தான் நெகட்டீவ் ரோல் பண்ணுவார்கள். நெகட்டீவ் ரோல் ரொம்ப சேலஞ்சிங்கா இருக்கும். பாஸ்ட்டீவ் ரோலை விட நெகட்டீவ் ரோல் பண்ணும் போது மக்கள்கிட்ட நல்ல ரீச் கிடைக்கும்.
நான் பரதநாட்டியம் முறைப்படி கற்றுக்கொண்டேன். அரங்கேற்றம் வரும் சமயத்துல டென்த் எக்ஸாம் வந்திடுச்சு. அதனால அப்படியே நிறுத்திட்டேன். அதுக்கு பிறகு தொடருவதற்கு டயம் கிடைக்கல. ஆனா ஸ்கூல்ல, காலேஜ்ல படிக்கும்போது நிறைய டான்ஸ் பெர்பாமன்ஸ் பண்ணியிருக்கேன். ஆனா அக்கா அளவுக்கு எல்லாம் நான் டான்ஸர் கிடையாது. அவ சூப்பரா டான்ஸ்ல வெளுத்து வாங்குவா. நான் எப்படி சொல்லி கொடுக்கிறாங்களோ அப்படியே ஆடுவதோடு சரி.
என்னை பொருத்தவரை எந்த ஒரு விஷயம் எடுத்துக்கிட்டாலும் அதில் உறுதியா இருக்கனும். அப்போதான் ஜெயிக்க முடியும். ஒரு விஷயம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதில் எவ்வளவு தடைகள் வந்தாலும் சரி கண்டிப்பாக செஞ்சி முடிச்சுடுவேன் என்று கூறிவிட்டு சீரியலில் நடிக்க கிளம்பினார் மகாலட்சுமி.
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!