ஒரு வருஷமா பேச்சு வார்த்தை இல்லையா?... அதிர்ச்சி கொடுத்த சின்னத்திரை பிரபல ஜோடி
சென்னை :விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் பிரபலமான ரச்சிதா -தினேஷ் ஜோடி நிஜத்திலும் ஜோடியானார்கள்.
சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டு சீசன்களிலும் நடித்து பிரபலமாக உள்ளார் நடிகை ரச்சிதா.
இந்நிலையில் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக இவர் கடந்த ஒரு வருடமாக பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.

பிரிவோம் சந்திப்போம் சீரியல்
விஜய் டிவியின் பிரபலமான தொடர் பிரிவோம் சந்திப்போம். இந்தத் தொடரின்மூலம் அறிமுகமான நடிகை ரச்சிதா, தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷுடன் காதல் வயப்பட்டு, இரண்டு ஆண்டுகள் இருவரும் காதலித்தனர். தொடர்ந்து கல்யாணமும் செய்து கொண்டனர்.

சிறப்பான திருமண வாழ்க்கை
ஆரம்பத்தில் இவர்கள் காதலை ஏற்க மறுத்த குடும்பத்தினர், தொடர்ந்து சம்மதம் தெரிவிக்க இவர்கள் திருமணம் நடைபெற்றது. திருமண வாழ்க்கை, சீரியல் என சிறப்பாகவே இவர்கள் வாழ்க்கை இருந்தது. தொடர்ந்து சரவணன் -மீனாட்சி தொடர் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார் ரச்சிதா.

நாச்சியார்புரம் சீரியல்
இந்த தொடரின் சீசன் 2விலும் இவரே நடித்திருந்தார். விஜய் டிவியின் விருது வழங்கும் நிகழ்ச்சியிலும் கணவருடன் கலந்து கொண்டு விருதை பெற்றுக் கொண்டார் ரச்சிதா. இருவரும் இணைந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் சீரியலிலும் நடித்தனர்.

நிறுத்தப்பட்ட சீரியல்
கொரோனா காரணமாக இந்த சீரியல் இடையில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் தொடரிலும் பிசியாக நடித்துவந்தார் ரச்சிதா. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை ரச்சிதா தற்போது பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டுள்ளது.
Recommended Video

ஒரு வருடமாக பிரிவு
கடந்த ஒரு வருடமாக இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை இல்லாமல் உள்ளதாகவும் அவர்களை சமாதானப்படுத்த முயன்ற குடும்பத்தினரின் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் இந்த தகவல் வெளியான நிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











