காதல் தோல்வியால் பாடம் கற்றேன்: சீரியல் நடிகை சபர்ணா
சன் டிவியில் ஒளிபரப்பான சொந்த பந்தம் தொடரில் வில்லியாக நடித்து இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்கியவர் சபர்ணா. அந்த தொடரில் இருந்து பாதியிலேயே காணமல் போன சபர்ணா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதுக்கவிதை தொடரிலும் வில்லி வேடத்தில் நடித்து வருகிறார். .
சபர்ணாவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம். காதலில் தன்னுடைய தேர்வு தவறாகப் போனதால் கல்யாணத்திற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க கூறிவிட்டேன் என்கிறார் இந்த கோயம்புத்தூர் பொண்ணு.

நிகழ்ச்சித் தொகுப்பாளினி
கோவையில் டிகிரி முடிச்சதுமே மீடியாதான் என்னோட சாய்ஸா இருந்தது. சென்னை வந்தேன். மியூசிக் சேனல்ல வேலை பார்த்தேன். நிகழ்ச்சிக்கு வந்த சினிமா பிரபலங்கள் நடிக்க கூப்பிட்டாங்க.

சினிமா, சீரியல்கள்
படிக்காதவன், பிரிவோம் சந்திப்போம், காளை உள்பட சில படங்களில் நடிச்சேன். அப்புறம் சீரியல் வாய்ப்பு வந்தது. சினிமாவை விட சீரியல் பெட்டரா தெரிஞ்சுது நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.

காதல் வாழ்க்கை
இந்த நடிப்பு வாழ்க்கையில் எனக்கும் காதல் வந்தது. நானும் காதலிச்சேன். ஆனால் என்னோட செலக்ஷன் தப்பாகிவிட்டது. காதலில் இருந்து நானும் வெளியில வந்துட்டேன்.

அப்பா அம்மா சாய்ஸ்
இனி அப்பா அம்மா சாய்சுக்கு விட்டுட்டேன். அவுங்க யாரை கை காட்டுறாங்களோ அவரை கட்டிக்குவேன்.

கணவரை காதலிப்பேன்
திருமணத்திற்குப் பின்னர் அவரையே காதலிக்கலாம் என்ற ஐடியாவில் இருக்கேன் என்கிறார் சபர்ணா.


Click it and Unblock the Notifications











